நாமக்கல், அக்.21- பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், கீர னூரில் உள்ள பட்டாசு தயா ரிக்கும் தொழிற்சாலையில் வெடிப் பொருட்கள் உற்பத்தி செய்யும் இடம், சேமித்து வைக்கும் இடம் உள்ளிட்டவற் றையும் அரசின் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றதா என்பதை ஆட்சி யர் ச.உமா ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் 7 பட்டாசு தயா ரிக்கும் சிறு ஆலைகளும், 18 பட்டாசு கிடங்கு களும், 31 நிரந்தர பட்டாசு கடைகள் செயல் பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை உரிமம் கோரி இதுவரை 215 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மேற்படி பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ தடுப்புக்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்றும், தீ தடுப்பான்கள் அமைக்கப்பட் டுள்ளதா?, அவசரகால வழிகள் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். வரை படத்தில் உள்ளவாறு கட்டிட அமைப்பு உள்ளதா? எனவும், உரிமத்தில் குறிப்பிடப் பட்டுள்ள அளவின்படி மட்டுமே இருப்பு உள்ளதா? எனவும், வைக்கப்பட்டுள்ள வெடி மருந்துகளின் அளவு குறித்தும் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, கேட்டறிந்து, உற்பத்தி செய்த வெடிப்பொருட்களை உடனடியாக குடோனில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும் என்றும், அனைத்து பாதுகாப்பு கருவிகளையும் முறையாக பரா மரித்திடவும் பட்டாசு தொழிற்சாலை நிர் வாகத்தினரிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.இராஜேஸ் கண்ணன்,நாமக்கல் வருவாய் கோட்டாட் சியர் சரவணன் உட்பட துறை சார்ந்த அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.