districts

ஒன்றிய மோடி அரசின் குழப்படியான அறிவிப்பால் அழிவின் பிடியில் தென்னை நார் தொழில்கள்

கோவை மாவட்டத்தில் பொள் ளாச்சி என்றதுமே இளநீர் தான் நினை வுக்கு வரும். ஆனால், தென்னையில் இருந்து கிடைக்கும் தேங்காய் மட் டையை மூலபொருளாக கொண்டு  கயிறு, மேட், அழகு சாதனபொருட் கள், மரப்பலகைகள் உள்ளிட்ட  ஜநூறுக்கும் மேற்பட்ட உபபொருட் கள் தயாரிக்கப்படுகிறது. மேலும், நார் எடுத்த பின் அதிலிருந்து கழி வாக கிடைக்கும் கோ கோ பிட் என்ற  நார்கழிவு இயற்கையான மண் ணுக்கு உகந்த உரம் தயாரிக்க பயன் படுகிறது.  தமிழகத்தில்  4.50லட்சம் ஹெக் டேர்க்கு மேல் தென்னை சாகுபடி  செய்யபட்டு வருகிறது. குறிப்பாக  கோவை, திருப்பூர்,  உள்ளிட்ட 19 மாவட்டங்களில் தென்னை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. தமிழ் நாடு முழுவதும் 7500  தென்னைநார் தொழிற்சாலைகள் உள்ளன. கிராமப் புற பொருளாதாரத்திற்கு வலு சேர்த்த இத்தொழிலில் ஈடுபட்ட ஏறத் தாழ 6 ஆயிரம்  தொழிற்சாலைகளை நஷ்டத்தினால் தற்போது மூடிவிட்ட னர். அரசாங்கத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் உள்நாட்டு வணிகமும் அன்னிய செலாவணியாக சுமார் ரூ.5 ஆயிரம் கோடியும் ஈட்டி தரும்  இத்தொழிலை தவறான வெளியுறவு  மற்றும் பொருளாதார கொள்கை களால் மோடி தலைமையிலான பாஜக அரசு அழிவின் விழிம்பில் தள் ளியுள்ளது.  ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல்  அமைச்சகம் மத்திய மாசுக் கட்டுப் பாடு வாரியத்தின் தொழிற்சாலை களுக்கான வரைவு அறிவிக்கையை கடந்த ஆண்டு வெளியிட்டது.

அதில்  தென்னை நார் தொழில் மூன்று  வகையாகப் பிரித்து வெளியிடப் பட்டது. தென்னை நார்களை ரசா யன சாயப் பூச்சு தொழில்களுக்கு ஆரஞ்சு அல்லது சிவப்பு என்றும் தண் ணீரின்றி பயன்படுத்தப்படும் தென்னை நார் வகை தொழில்கள்  பச்சை என்றும், நார்நூல் (ஃபைபா்) போன்ற தொழில்களுக்கு வெள்ளை  என மூன்று வகையாகப் பிரிக்கப் பட்டு குழப்படியான அறிவிப்புகள் தொழில் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.  மேலும் தென்னை சார்ந்த பொருட்கள் மதிப்பு கூட்டி இந்தியாவி லிருந்து சீனாவிற்கு பெருமளவு ஏற்று மதி செய்யப்பட்டது. மோடி தலைமை யிலான பாஜக அரசு  வர்த்தக கொள் கையில் எதிர்நிலையை கடைபி டித்து வந்த நிலையில் ஏற்றுமதி குறைந்தது. மேலும், ஜிஎஸ்டி, பொரு ளாதார மந்தநிலை, வங்கிகளில் கட னுதவி பெறுவதில் கட்டுபாடுகள், கன்டெய்னர்கள்  வாடகை போன்ற  காரணங்களாலும் தென்னை சார்  காயர் தொழில்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. ஆயிரக்கணக் கான தொழிற்சாலைகள் இயங்கா ததால் வங்கி கடன் திரும்ப செலுத்த  முடியாத சூழலுக்கு தள்ளபட்டு வங் கிகளும் கடன் தொகை திரும்ப செலுத்த நெருக்கடி தருவதால் இதி லிருந்து விடுபட வழிதெரியாமல் விழி பிதுங்கிக்கிடக்கின்றனர்.  இதுகுறித்து தமிழ்நாடு தென்னை  விவசாயிகள் சங்கத்தின் மாநில  தலைவர்  எஸ்.ஆர். மதுசூதனன் கூறு கையில், இந்தியாவில் 19 மாநி லங்களில் லட்சக்கணக்கானோர் தென்னை சார்தொழிலை நம்பி  வாழ்ந்து வருகின்றனர்.

தென்னை யின்  கைமட்டையை பயன்படுத்தி மர புசாரா மின்சாரத்தையும் தயாரிக் கலாம் என இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தென்னை சார் தொழில்கள் பாஜக அரசின் பன்னாட்டு நிறுவ னங்கள் அதரவான கொள்கை மற் றும் விவசாயிகள் சிறு உற்பத்தி யாளர்கள் மீது அக்கைறையின்மை யால் கடுமையாக பாதிக்கபட் டுள்ளது. ரூ.2.50 வரை விற்பனை யான  ஒரு தென்னை மட்டை தற்போது  ரூ. 30 பைசா அளவுக்கு தான் வாங்கு கிறார்கள். ஆண்டுக்கு  ஒரு மரத்தில்  இருந்து மட்டும் ரூ.150 வரை விவ சாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தென்னை வளர்ச்சி வாரி யத்திற்கு ஒன்றிய அரசு போதிய நிதி  ஒதுக்கவில்லை. இதனால்,   தென்னை வளர்ச்சி வாரியத்தால் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவ  முடியாத சூழலுக்கு தள்ளப்பட் டுள்ளனர். தென்னையை நம்பி வாழும் விவசாயிகள் மற்றும் தென் னைசார் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் கடுமையாக பாதிக்கபட்டுள்ளதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு  கூடுதல் நிதியினை ஒதுக்க வேண் டும் என்றார். ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை தருவேன் என  வாயால் வடை சுட்டு ஆட்சிக்கு வந்த  மோடி அரசு. வேலை வாய்ப்புகளை உருவாக்காதது மட்டுமல்ல, இருக் கிற வேலையையும் பறித்துக் கொண்டதே பத்தாண்டுகால மோடி  அரசின் சாதனை. அந்த வகையி லேயே நாடு முழுவதும் 25  லட்சம்  தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு தந்த தென்னை நார் தொழி லில் ஈடுபட்டிருந்தவர்களையும் விரட்டியடித்தது மோடி தலையி லான ஒன்றிய அரசு. காலம் வரும்  கணக்கு பார்க்கலாம் என காத்திருக் கின்றனர் தென்னை விவசாயிகள். -இராமகிருஷ்ணன்