கோவை, நவ. 8– மாநில அளவிலான தாய் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று கோவை மாணவர் கள் சாதனை படைத்தனர். திங்களன்று கோவை வந்த வீரர்க ளை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்தனர். சென்னை ஆவடியில் மாநில அளவிலான தாய் பாக்ஸிங் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். கோவை யிலிருந்து 10 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில், சுமையா, சனா பெண்கள் பிரிவில் தங்கமும், ஹம்னா வெள்ளிப்பதக்கமும் பெற்றனர். இதேபோன்று ஆண்கள் பிரிவில், சிஹாத், ரித்விக், வினீஷ், வித்தீஷ் தங்கப்ப தக்கமும் ரியான், சைஃப் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். சீனியருக்கான ப்ரோ ஃபைட் பிரிவில் தினேஷ் சாம்பியன் ட்ராஃபியும் கைப்பற்றினர். பதக்கங்களை வென்று பயிற்சி யாளர் பெரோஸ்பாபு தலைமையில் கோவை ரயில் நிலையம் வந்த வீரர்களுக்கு அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் சக வீரர்கள், உறவினர்கள், நண்பர்கள் சூழ்ந்து உற்சாக வரவேற்ப ளித்தனர். பதக்கங்களை குவித்த மாணவர்கள் கோவை ஜிஎம் நக ரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தால் நடத்தப் படும் பாரதி பாடசாலையில் பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.