districts

img

கோவை பிரஸ் கிளப் நிர்வாகிகள் தேர்வு

கோவை, செப்.29-  கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்ற ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று, தலைவர் ஏ.ஆர்.பாபு  தலைமையில் நடைபெற்றது. செயலாளர் முத்துப் பாண்டி, பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். சட்ட நடவடிக்கை குழு தொடர் பான அறிக்கையை, ஒருங்கிணைப்பாளர் கண்ணன் முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகிக ளுக்கான அறிவிப்பை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்ற தேர்தல் அதிகாரியும், மூத்த வழக்கறிஞருமான பாலமுருகன் அறிவித்தார். அதில் மன்றத்தின் புதிய தலைவராக தங்கராஜ் (தினமணி) செயலாளராக  ஐஸ்வர்யா (புதிய தலைமுறை) பொருளாளராக விஜய் (விகடன்) உள்ளிட்ட 13 பேர் தேர்வு செய்யப்பட்ட னர். முடிவில், ஐஸ்வர்யா நன்றி கூறினார்.