districts

img

கோவை: பாலர் பூங்கா கிளை அமைப்பு

கோவை, மார்ச் 22- கோவையில், பாலர் பூங்கா கிளை அமைக்கப்பட்டது. இதில், ஏராளமான சிறு வர், சிறுமியர் பங்கேற்றனர். கோவை எஸ்.எஸ்.குளம் மேற்கு பகுதி சிவானந்தபுரத்தில் சிறுவர், சிறுமியர் பங் கேற்ற பாலர் பூங்கா கிளை அமைக்கப்பட் டது. கோவை மாவட்ட அமைப்பாளர் ஜே. உஷா இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் என்.அமிர்தம் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திண்டுக் கல் பாலமுருகன் மற்றும் மாவட்ட மைய உறுப் பினர்கள் ஆர்.மூர்த்தி, பி.சுமதி, எம்.தினேஷ் ராஜா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ் வில், பிடித்த கதை, தலைவர்கள், விளையாட் டுகள் குறித்து பேசப்பட்டது. இதில், ஆர்வத்து டன் சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்று கருத்துக் களை தெரிவித்தனர். முடிவில், பாலர் பூங்கா வுக்கு விவேகானந்தர் பெயர் சூட்டப்பட்டது. பாலர் பூங்கா கிளையின் ஒருங்கிணைப்பாளர் களாக ஏ.கனிஷ்கா, ஜி.பரணி, எஸ்.மோனிகா மற்றும் பொறுப்பாளர்களாக எஸ்.பானு, ஏ. சுதா, ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோன்று, எஸ்.எஸ்.குளம் கே.கே.நகர் பகுதியில் அமைக்கப்பட்ட பாலர் பூங்கா நிகழ்வில், சிபிஎம் 13 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சுமதி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.