districts

கோவை அரசு மருத்துவமனை ஆய்வகத்தின் தரம் உயர்வு ஐசிஎம்ஆர் அறிவிப்பு

கோவை, ஜூன் 19- கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் மையம் ஆய்வகத்தைத் தரம் உயர்த்தி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ஐசிஎம்ஆர்) அறிவித்துள்ளது.  கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த உயிரியல் ஆய்வகத்தை வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும்  ஆய்வகமாக ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. இங்குப் பரிசோதனை செய்யப்படும் தரத்தின் அடிப்படையில் தரப்பரிசோதனை ஆய்வக மாகக் கடந்த ஆண்டு தரம் உயர்த்தி ஜசி எம்ஆர் அறிவித்தது. இந்த ஆய்வகத்தின் மூலம் தற்போது 2500 முதல் 3 ஆயிரம் வரை கொரோனா தொற்று மாதிரிகள் தினமும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோ தனை எண்ணிக்கை, தரம் உள்ளிட்டவை அடிப்படையில் கோவை அரசு மருத்துவ மனையில் செயல்பட்டு வரும் ஆய்வகத்தை ‘ high throughput’ ஆய்வகமாகத் தரம் உயர்த்தி ஜசிஎம்ஆர் அறிவித்துள்ளது.  இதன் மூலம் கூடுதல் கருவிகள் வழங்கப்படும் என்றும், கூடுதலான பரி சோதனை மேற்கொள்ளமுடியும் என்றும்  மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள் ளனர்.

 மேலும், தற்போது கோவை அரசு மருத்து வமனையின் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வகத்தில்  4 பிசிஆர் கருவி களும், 3 ஆர் என் ஏ கருவிகளும் உள்ளன.  இதன் மூலம் தினமும் மூன்று ஆயிரம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப் பட்டு வருகிறது. தற்போது தரம் உயர்த்தப்பட் டுள்ளதால் கூடுதலாக மூன்று பிசிஆர் கருவி கள் ஜசிஎம்ஆர் சார்பில் வழங்கப்பட்டுள்ளன.  மேலும் ஒரு ஆர்என்ஏ எக்ஸ்ட்ராக்டர் வழங் கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம்  கொரோனா பரிசோதனைகளின் எண் ணிக்கையை 4500 வரை உயர்த்த முடியும் என  மருத்துவமனை  அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.

;