கோவை, ஏப்.2- இந்தியா கூட்டணியின் கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்கு மார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டு வருகிறார். துடியலூர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட கேம்போர்டு பள்ளி அருகே பிரச்சாரத்தை துவக்கினார். தொடர்ந்து, சீனிவாசா நகர், கலைஞர் நகர், நஞ்சேகவுண்டன்புதூர், உரு மாண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ், அரசு தொழிற் பயிற்சி மையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, உருமாண்டம்பாளை யத்தில் வாக்காளர்கள் மத்தி யில் பேசிய வேட்பாளர், “முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்திற் காக குஜராத் மாநிலம் ஜாம்நக ரில் உள்ள விமான நிலையத்துக்கு மோடி அரசு பத்தே நாட்களில் சர்வதேச அங்கீகாரம் அளித்துள் ளது. ஆனால் கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க மோடி அரசுக்கு விருப்பம் இல்லை”. மோடி அரசாங்கம் அம்பானி மற்றும் அதானிக்காக மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என்றார். இந்த பிரச்சாரத்தின்போது இந்தியா கூட் டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.