districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சேலம், நவ.18- சேலம் அருகே சாலை மற்றும் சாக்கடை வசதி ஏற் படுத்தி முறையான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், அரிசிபாளையம் பாவேந்தர் தெரு பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் சுகாதாரமான குடிநீர், முறையான சாலை, சாக்கடை வசதி இன்றி வாழ்ந்து  வரும் நிலையில், அதுதொடர்பாக  அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சத்திரம் பிரதான சாலை யில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாநக ராட்சி அதிகாரிகள், செவ்வாய்பேட்டை காவல் துறையினர், உடனடியாக சாக்கடை வசதி ஏற்படுத்தி முறையான  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன்பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போதை பொருள் கடத்தி வந்த இருவர் கைது

உதகை, நவ.18- கர்நாடகாவில் இருந்து போதை பொருள் கடத்தி வந்த  இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலத்திலிருந்து முத்தங்கா சோதனைச் சாவடி வழியாக வயநாடு மற்றும் மலப்புரம் பகுதிகளுக்கு போதை பொருள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. இந் நிலையில், செவ்வாயன்று மதுவிலக்கு பிரிவு காவல் ஆய் வாளர் தலைமையிலான காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை ஆய்வு செய்ததில் போதை  பொருட்கள் மற்றும் மாத்திரைகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த காவல் துறையினர் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஜிஷாத் (21),  ஷக்கீர் (23) ஆகியோரை கைது செய்தனர். மேலும், தொடர்  விசாரணையில் இத்தகைய போதை பொருட்கள் பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விற்கப்படுவதாக தெரிவித் துள்ளதையடுத்து, தமிழக காவல் துறையினர் சோத னையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலி 

உடுமலை, நவ.18- உடுமலை தாலுகா, குடி மங்கலம்  ஒன்றியத்தில் புத னன்று பெய்த கனமழை யால் அனிக்கடவு ஊராட்சி இராமசந்திரபுரத்தில் உள்ள ஓடையில் மழை நீர் வெள்ள மாக சென்றது. அப்போது ஓடையின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த செல் லசாமி மற்றும் அவரது மகன் செல்வகுமார் ஆகிய இருவ ரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சிக்கி செல்ல சாமி (70) பரிதாபமாக உயிரி ழந்தார். இதனை தொடர்ந்து இவரது உடலை மீட்ட தீய ணைப்பு துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.