districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறியும் முகாம்

அவிநாசி, ஏப்.7- அவிநாசி அருகே தனியார் பள்ளியில் புதனன்று ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ்  ஆரோக்கியமான குழந்தைகளைக் கண்டறியும் முகாம் நடைபெற்றது. போஷன் அபியான் திட்டத்தின் கீழ் மார்ச் 21 முதல் ஏப்ரல்  6 ஆம் தேதி வரை 0-6 வயது வரையிலான ஆரோக்கிய மான குழந்தைகளைக் கண்டறியும் முகாம் நடைபெற்ற வரு கிறது. அதன்படி, அவிநாசி வட்டாரத்தில் அனைத்து குழந் தைகள் மையங்கள், தனியார் நர்சரி பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகளில் உள்ள அனைத்து குழந்தைகளின் எடை, உயரம் கண்டறிந்து ஆரோக்கியமான குழந்தையைக் கண்டறியப் படுகிறது. இதன் ஒரு பகுதியாக அவிநாசி அருகே உள்ள  தனியார் பள்ளியில் நடைபெற்ற முகாமை குழந்தை வளர்ச்சித் திட்டத்தினர், அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கத்தி னர், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் ஒருங்கிணைத் தனர். இம்முகாமில் 250க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பருத்தி ஏலம்

அவிநாசி, ஏப்.7- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் புத னன்று நடைபெற்ற ஏலத் திற்கு, மொத்தம் 1841 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ.10 ஆயிரம் முதல்  ரூ.12,164 வரையிலும், டி.சி.எச் ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11 ஆயிரம் முதல் ரூ.12,406 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.58 லட்சத்து 59 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றதாக ஏல நிர்வா கிகள் தெரிவித்தனர்.

மின் தடை அறிவிப்பு 

அவிநாசி, ஏப்.7- சேவூர், வடுகபாளையம் ஆகிய துணை மின் நிலை யங்களில் வெள்ளியன்று (ஏப்.8) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே, அன்றைய தினம், சேவூர், ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப் பார், போத்தம்பாளையம், சந்தைப்புதூர், பந்தம்பாளை யம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூர், தண்ணீர் பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைகுளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூர், தளிஞ்சிப் பளையம், மாரப்பம்பாளையம். வடுகபாளையம், வடுக பாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைகுளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டர்பாளையம், ஒலப்பாளை யம்  உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை  4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.

லம்பாடி இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்த்திடுக

டி.என்.வி.செந்தில்குமார் எம்.பி., வலியுறுத்தல்

தருமபுரி, ஏப்.7- லம்பாடி இன மக்களை பழங் குடியின பட்டியலில் சேர்க்க வேண் டும் என மக்களவையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பி னர் டி.என்.வி.செந்தில்குமார், அரசி யலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதி கள் மற்றும் பழங்குடியினர்) ஆணை கள், 1950 திருத்த மசோதா குறித்து  மக்களவையில் பேசுகையில், சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் மற் றும் உறுதியான நடவடிக்கை மேற் கொள்ளும் வகையில் “குருமா, குரு மன், குரும்பா, குருமன் கவுண்டர், குரும்பன் மற்றும் குரும்பர்”ஆகிய மக்களை குருமன்ஸ் என பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என  ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் முண் டாவை கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக கடந்த வெள்ளிக் கிழமை தனிநபர் மசோதாவை தாக் கல் செய்தேன். இதேபோல், தமிழகத்தில் உள்ள மற்றொரு நீண்ட கால கோரிக்கை யான லம்பாடி பழங்குடியின மக் களை எஸ்டி பட்டியலில் சேர்க்க  வேண்டும் என்பதாகும். தமிழ்நாட் டில் உள்ள லம்பாடிகள் பிற்படுத்தப் பட்ட வகுப்பினராக அறிவிக்கப் பட்டுள்ளனர். ஆனால், அம்மக்கள் அண்டை மாநிலங்களான கர்நா டகா மற்றும் ஆந்திரப் பிரதேசத் தில் பட்டியலின வகுப்பினராக உள் ளனர். தமிழ்நாட்டில் அவர்களின் மொத்த மக்கள் தொகை சுமார் 2  லட்சம். தருமபுரியில் மட்டும் 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். எனவே, லம்பாடி இன மக்களை பழங்குடியினர் (எஸ்டி) பட்டியலில் சேர்க்க மாநில அரசு 2009 ஆம் ஆண்டு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பி யது. 1994ல், தேசிய பட்டியல் சாதி கள் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான ஆணையத்தால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு வும் இதைப் பரிந்துரைத்தது. எனவே, இவர்களையும் பட்டிய லில் சேர்க்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு டி.என்.வி. செந்தில்குமார் எம்.பி., பேசினார்.