மே.பாளையம், மார்ச் 6- யானை வழித்தடம் என்பதால், 200 ஆண்டுகளுக்கு மேலான பழமை யான கல்லார் அரசு பழப்பண்ணைக் குள் சுற்றுலாப் பயணிகள் வருகை தர சென்னை உயர்நீதிமன்ற தடைவிதித் துள்ள நிலையில், அதற்கான அறி விப்பை தோட்டக்கலைத்துறை வெளி யிட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் உள்ள கல்லார் என்னு மிடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது அரசு கல்லார் பழப் பண்ணை. நீலகிரி மலையடிவாரத்தில் நீர்வளமும், மண்வளமும் மிகுந்த இப்ப குதியில், கடந்த 1900 ஆம் ஆண்டு ஆங் கிலேயர் ஆட்சி காலத்தில் இப்பழப் பண்ணை துவக்கப்பட்டது. சுமார் இருபது ஏக்கர் பரப்பளவில் அரசின் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இப்பழப்பண்ணையில், ஆண்டு முழுவதும் ஒரே சீதோஷ்ன நிலை நிலவுவதால், உலகில் மிக சில இடங்களில் மட்டுமே அரிதாக விளை யக்கூடிய மருத்துவ குணம் மிக்க துரி யன், மங்குஸ்தான், ரம்புட்டான், வாட்டர் ஆப்பிள், வெண்ணைப்பழம், லிட்சி, மலேயன் ஆப்பிள், சிங்கபூர் பலா என ஏராளமான பழ வகை மரங்களை இங்கு காணலாம். அதேபோன்று, முன்னூற்றுக்கும் மேற்பட்ட சில்க் காட்டன் ட்ரீ என்ற ழைக்கபடும் இலவம் பஞ்சு மரங்கள், அரிதான மலர்களும், மூலிகைகளும் இயற்கையின் பொக்கிஷங்களாக இங்கு கொட்டி கிடக்கின்றன. மேலும், இப்பண்ணையில் சீசனுக்கு ஏற்ற வகையில் விளையும் அரிய வகை பழங் கள் விற்பனை, மர மற்றும் மலர் நாற்றுக் கள் விற்பனை, குழந்தைகள் விளை யாட சிறிய அளவில் பூங்கா என பல் வேறு வசதிகள் உள்ளதால், விடு மறை நாட்களில் சுற்றுலாப் பயணிக ளின் வருகையும் அதிகரித்தே காணப் படும். இந்நிலையில், யானைகளின் வழித் தட பாதையில் உள்ள குறுக்கீடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், யானை வலசைப் பாதையில் உள்ள 123 ஆண்டுகள் பழ மையும் பெருமையும் கொண்ட கல்லார் பழப்பண்ணையை வனத்துறையி னரிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, கல்லார் பழப்பண்ணைக்குள் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதித்து, அதற்கான அறிவிப்பு தோட்டக்க லைத்துறையால் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கம் போல் அரசு பழப் பண்ணைக்கு வருகை தந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற னர். இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகல் கூறுகையில், “சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தற் போது பொதுமக்கள் உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மர நாற்றுக்கள் உற்பத்தி, விவசாயி களுக்கு மரக்கன்றுகள் விற்பனை, ஆகி யவை வழக்கம் போல் நடைபெறும்” என்றனர். மேட்டுப்பாளையம் பகுதியின் அடையாளமாக 123 ஆண்டுகள் பழமை யான வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பண்ணை முடக்கப்படுவது கவலை தரக்கூடியதாக உள்ளதென பொதுமக் கள் வேதனை தெரிவித்துள்ளனர்.