பேரிடர் மேலாண்மை மீட்பு ஒத்திகை பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு
பொள்ளாச்சி, ஆக.31- பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, வருவாய்த்துறை சார்பில் மாநில அளவிலான பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் கலந்து கொள்ள வருவாய்த் துறை அழைப்பு விடுத்துள்ளது. கோவை மாவட்டம், ஆனைமலை வட்டத்திற்குட்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தில் மாநில அளவிலான பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்வு செப்.1 ஆம் தேதியன்று (இன்று) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட ஒத்திகை நிகழ்வுகள் குறித்து விளக்கப்பட உள்ளது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் மற்றும் ஆனை மலை வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில், ஆனைமலை தாலுகாவைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என வருவாய்த்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடக்க இருப்பவை
கோவை மக்கள் ஒற்றுமை மேடை நடத்தும் "மகாத்மா மண்ணில் மதவெறி" நூல் அறிமுக விழா நாள்: செப்.1, வியாழக்கிழமை. இடம்: கோவை மலையாளி சமாஜம், 9 ஆவது வீதி பிரிவு, டாடாபாத், கோவை. ஏற்புரை: ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்).
சிறுமி தற்கொலை வழக்கு - வாலிபருக்கு ஆயுள் தண்டனை
ஈரோடு, ஆக.31- சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் வாலி பருக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள கொளத் துப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவர் குப்புசாமி மகன் நந்தகுமார் (22). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை மார்பிங் செய்து மிரட்டியதாக கூறப்பட்டது. இதனால், மனமுடைந்த சிறுமி கடந்த 2019 ஏப்.4 ஆம் தேதியன்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரி ழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சிறுமியை தற் கொலைக்கு தூண்டியதாக கொடுமுடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளை பாலியல் குற்றங் களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் (போக்சோ) நந்தகுமாரைக் கைது செய்தனர். ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் செவ்வாயன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட நந்தகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஆர்.மாலதி உத்தரவிட்டார்.
உணவக ஊழியரை தாக்கிய அதிமுகவினர் மீது வழக்கு
சேலம், ஆக.31- ஆத்தூர் அருகே குடி போதையில் உணவக ஊழியரை தாக்கி உணவகத்தை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி நான்கு ரோடு தம்மம்பட்டி செல்லும் பிரதான சாலையில் குமரேசன் (36) என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இங்கு, கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த 4 பேர் குடிபோதையில் வந்து சாப்பிட்டு கொண்டிருந்த னர். அப்போது ஆப்பாயில் கேட்டுள்ளனர். மாஸ்டரும் ஆப்பா யில் போட்டு கொடுத்துள்ளார். பின்னர் ஆப்பாயில் ஒழுங்காக போடவில்லை; பெப்பர் அதிகமாக உள்ளது எனக்கூறி தகராறில் ஈடு பட்டனர். இதுகுறித்து கடை உரிமையாளர் குமரேசன் கேட்ட போது அவரையும், கடையில் இருந்த ஊழியர்களையும் தாக்கி யுள்ளனர். பின்னர் கடையில் இருந்த மாவு மூட்டைகளை கீழே தள்ளி சூறையாடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து உணவகம் உரிமையாளர் குமரேசன் கெங்க வல்லி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உணவகத்தில் இருந்த கண்கா ணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் குடிபோதையில் இருந்த நபர்கள் உணவக ஊழியர்கள் மற்றும் உரிமையா ளரை தாக்கியது வீடியோவில் பதிவானது தெரியவந்தது. இதனையடுத்து உணவகத்தை சூறையாடிய அதிமுக பிரமுகர் களான பிரவீன், பிரபு, கெளதம், நடராஜ் ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் 4 பேர் மீது ஏற்க னவே கெங்கவல்லி பேரூராட்சி தலைவர் மகனை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
கோவை, ஆக. 31 - கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைத் திட வேண்டும். நிர்ணயிக் கப்பட்ட விலையில் உர விற் பனை செய்வதை உறுதிப் படுத்திடவும்,அதிக விலைக்கு உர விற்பனை செய்தல், உரக்கடத்தல், உரப்பதுக்கல், வேளாண் மை உபயோகித்தல் ஆகிய சட்டத்திற்கு புரம்பான செயல்களை தடுத்திட பறக்கும் படைகள் அமைக் கப்பட்டுள்ளது. கோவையில், 273 இடங் களில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. இதில், உர விற்பனை முனைய கருவி இருப்பிற்கும், உண்மை இருப்பிற்கும் வேறுபாடு காணப்பட்டது. படிவம் மேலொப்பம் பெறாமல் விற்பனை செய்யப்பட்டது ஆகிய குறைபாடுகள் குழு ஆய்வில் கண்டறியப் பட்டது. உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன் விதிமுறை களுக்கு உட்பட்டு 9 கடை களுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டு உரிமம் தற் காலிகமாக இரத்து செய் யப்பட்டு, நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
குடிநீர் மோட்டார்களை இயக்க மும்முனை மின்சாரம் கோரி தீர்மானம் நிறைவேற்றம்
குடிநீர் மோட்டார்களை இயக்க மும்முனை மின்சாரம் கோரி தீர்மானம் நிறைவேற்றம் திருப்பூர், ஆக. 31 - மடத்துக்குளத்தில் குடிநீர் மோட்டார்களை இயக்க மும்முனை மின்சாரம் வேண்டும் என்று மடத்துக்குளம் பேரூ ராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மடத்துக்குளம் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் பேரூ ராட்சித் தலைவர் கலைவாணி பாலமுரளி தலைமையில் செவ்வாயன்று நடந்தது. துணைத்தலைவர் ரங்கநாதன், செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். இக்கூட்டத்தில், மடத்துக்குளம் பேரூராட்சியின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் செங்கழனிபுதூர் பகுதியில் 6 ஆழ்துளைக் கிணறு மின்மோட்டார்கள் மற்றும் குடிநீர் சேமிப் புத் தொட்டியிலிருந்து 2 மின் மோட்டார்கள் மூலம் நால்ரோட்டி லுள்ள மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது. அங்கிருந்து பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக் கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த மின் மோட்டார் இணைப்பு விவசாய மின் இணைப்பில் உள்ள தால் குறைந்த நேரமே மோட்டாரை இயக்க முடிகிறது. இத னால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் மும்முனை மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 7ஆவது வார்டு பகுதியில் பன்றி குடில்கள் அமைக் கப்பட்டுள்ளதால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. பயிர் களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் பன்றிகள் கடிக்கி றது. எனவே பன்றிக் குடில்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கிருஷ்ணாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு தென்பு றம் புதிய நிழற்குடை அமைத்துத்தரவேண்டும் என்பது உள்ளிட்ட மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதியில்லை திருப்பூர் மேயரிடம் மக்கள் மனு
திருப்பூர், ஆக. 31 - திருப்பூர் திருப்பூர் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக் கும் பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.96 கோடியே 11 லட்சம் செலவில் 1,280 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் பலவஞ்சிபாளையம் பகுதியில் கட்டி தரப்பட்டது. இந்த குடியிருப்பில் போதிய அடிப்படை வசதி கள் இல்லை என்று பொதுமக்கள் செவ்வாயன்று திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை சந்தித்து மனு கொடுத்த னர். இம்மனுவை பெற்றுக் கொண்ட மேயர் தினேஷ்குமார், உடனடியாக அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அப் போது பொதுமக்கள் கூறுகையில், பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வருவதில்லை. பல வீடுக ளில் ஜன்னல் கதவுகள் உடைந்து உள்ளது. இப்பகுதியில் பஸ்கள் குறித்த நேரத்தில் வருவதில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் காலை மற்றும் மாலை நேரங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர் என்றனர். இதனைத் தொடர்ந்து பொது மக்களிடையே பேசிய மேயர், குடிநீர் பிரச்சினை, தெரு விளக்கு, பொதுக்கழிப்பிடம் மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது 54 ஆவது வார்டு கவுன்சிலர் அருணாச் சலம், மாநகராட்சி அதிகாரிகள், குடிசை மாற்று வாரிய அதி காரிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உடன் இருந்தனர்.
காரை கடத்தி டிரைவரை கத்தியால் குத்திய கணவன் மனைவி கைது
தாராபுரம், ஆக. 31- தாராபுரம் அருகே குடிபோதையில் காரை கடத்தி டிரை வரை கத்தியால் குத்திய கணவன் மனைவி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியகலைமுத்தூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). இவர் சொந்த மாக கார் வாங்கி பழனி பகுதியில் வாடகைக்கு ஓட்டி வருகி றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கண வன் மனைவி ஜோடி திருப்பூருக்கு செல்ல வேண்டும் என ராஜேந்திரனிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து இருவரை யும் ஏற்றிக்கொண்டு ராஜேந்திரன் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தாராபுரம் அருகே வந்தபோது பொன்னாபுரத்தில் உறவினர் இருப்பதாக தெரிவித்து அங்கு சென்றுவிட்டு திருப்பூர் செல்லலாம் என்று கூறியுள்ளார் கள்.இதைத்தொடர்ந்து பொன்னாபுரம் செல்லும் வழியில் காரை நிறுத்திய கணவன் மனைவி இருவரும் மது அருந்தி விட்டு ராஜேந்திரனை கத்தியால் குத்தி காரிலிருந்து தள்ளி விட்டு காரை கடத்தி சென்றனர். மயக்கமடைந்த ராஜேந்தி ரனை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கடத்தி செல்லப் பட்ட கார் பொன்னாபுரம் அருகே உள்ள பாலத்தில் மோதி நிற்பது தெரியவந்தது. தகவலறிந்த காவல்துறை காரை மீட்டு காவல்நிலையத்திற்கு கொண்டுவந்தனர். இதற்கி டையே கார் விபத்துகுள்ளானதால் காரை விட்டுவிட்டு அப்ப குதி வழியாக வந்த பாலன் என்பவரை தாக்கி அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர். இதையடுத்து தொடர் குற்றசம்பவத்தில் ஈடுபட்ட கணவன் மனைவியை பிடிக்க தாராபுரம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் தாராபுரம் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக வந்த கணவன் மனைவியிடம் விசாரணை நடத்தினர். விசார ணையில் கடலூர் மாவட்டம் விருதாசலத்தை சேர்ந்த மணி கண்டன் (26) தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரது மகள் சத்யா (23) என்பதும் இருவரும் கணவன் மனைவி என்பதும் கார் மற்றும் இருசக்கர வாக னத்தை திருடியதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத் தப்பட்ட விசாரணையில் மணிகண்டன் மீது சேலம், அரியலூர், கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இன்று ஐந்து இடங்களில் வெள்ளத் தடுப்பு ஒத்திகை
திருப்பூர், ஆக. 31- திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆண்டிபாளையம் குளம், உடுமலை திருமூர்த்தி அணை, மடத்துக்குளம் கொழு மம் மீனவர் தெரு அமராவதி ஆற்றின் கரை, கோனேரிப் பட்டி நல்லதங்காள் ஓடை, கருமஞ்சிறை குட்டை ஆகிய ஐந்து மையங்களில் செப்டம்பர் 1ஆம் தேதி வியாழக் கிழமை வெள்ளத்தடுப்பு மாதிரி ஒத்திகை பயிற்சி நடத்தப்ப டுகிறது. இதன் மூலம் வெள்ள பாதிப்பு ஏற்படும்போது மேற் கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் பற்றி வருவாய், தீயணைப்பு, மருத்துவம், காவல் துறை உள்ளிட்ட துறையின ரும், தன்னார்வலர்களும் ஒருங்கிணைந்து பேரிடர் பயன் பாட்டு கருவிகளைக் கொண்டு இந்த ஒத்திகை மேற்கொள் கின்றனர். இதனால் பொது மக்கள் அச்சப்படத் தேவை யில்லை என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள் ளார்.
குடியிருப்புகள் நடுவே கழிவுநீரைக் கொண்டு செல்ல எதிர்ப்பு: சாலை மறியல்
அவிநாசி, ஆக.31- திருமுருகன்பூண்டி வி.ஜி.வி. ஸ்ரீ கார்டன் குடியிருப்புகள் நடுவே சாக் கடை கழிவுநீரைக் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் செவ் வாய்க்கிழமை சாலை மறியல் முயற் சியில் ஈடுபட்டனர். திருமுருகன்பூண்டி நகராட்சி 3 ஆவது வார்டுக்கு உட்பட்ட வி.ஜி.வி. ஸ்ரீ கார்டனில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப் புகள் உள்ளன. அப்பகுதி அருகே 200க் கும் மேற்பட்ட அடுக்குமாடிக் குடியிருப் புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற் கான பணியும் நடைபெற்று வருகிறது. இந்த இரு பகுதிகளிலும் இருந்து வெளி யேறும் கழிவுநீர் அனைத்தையும் வி.ஜி.வி. ஸ்ரீகார்டன் வழியாக செல்லும் வகையில் புதிதாகக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அணைபுதூர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் புதிய அடுக் குமாடிக் குடியிருப்பு அருகே உள்ள பாறைக்குழியில் தேங்கி வருகிறது. தற் போது ஒட்டு மொத்த கழிவுநீரும் வி.ஜி. வி. ஸ்ரீகார்டன் வழியாக செல்வதால் கடு மையான துர்நாற்றம் வீசி, மக்களுக்குச் சுகாதார சீர்கேடு ஏற்படும் என எதிர்ப் புத் தெரிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதற்காகச் செவ்வாய்க்கிழமை ஒன்று திரண்டனர். தகவலறிந்து வந்த திருமுருகன்பூண்டி காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திய தையடுத்து, மறியல் முயற்சியைப் பொதுமக்கள் கைவிட்டனர். இதைத் தொடர்ந்து உடடினயாக அங்கு சாக் கடை கால்வாய் அமைக்கும் பணி பாதி யிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் அப்பகுதிக்கு வந்த நகராட்சி தலைவர் குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பாதாளச் சாக் கடை அமைத்து அதன் வழியாகக் கழி வுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு நகராட்சி தலைவர் குமார், சாக் கடை கால்வாயை விரிவுபடுத்தி கழிவு நீர் எளிதாகச் செல்லும் வகையிலும், கால்வாயின் மேற்பகுதி முற்றிலுமாக மூடுவதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கி ருந்து கலைந்து சென்றனர்.
தேசியக்கொடியுடன் போராட்டம்: கைது
திருப்பூர், ஆக. 31 - பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந் தோர் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று தேசிய கொடியுடன் வந்து போராட்டம் நடத்தினர். அறிவொளி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே வசித்து வருகிறோம். நீண்ட நாட்களாக மாற்று இடம் கேட்டு போராடி வருகிறோம். ஆனால் அதிகாரிகள் இதுவரை நடவ டிக்கை எடுக்கவில்லை. எனவே தேசியக்கொடியுடன் போராட் டம் நடத்துகிறோம் என அவர்கள் கூறினர். இதையடுத்து அவர்களுடன் பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தநிலையில் தேசியக்கொடியுடன் போராட்டம் நடத்திய 8 பேரை, போலீசார் கைது செய்து தனி யார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடு வித்தனர்.
மயக்க பிஸ்கட் கொடுத்து ரயிலில் திருடிய கும்பல் கைது
திருப்பூர், ஆக. 31 - திருப்பூரில் ரயில் பயணியருக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து மொபைல் போன், பணம் திருடிய ஐந்து பேர் கொண்ட கும்பலை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கடந்த 16ஆம் தேதி, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சவுதம் சவுத்ரி மற்றும் ஒடிசாவை சேர்ந்த இளைஞர் ஒருவரிடமும், மொபைல் போன் மற்றும் 5,000 ரூபாய் பணம் திருடப்பட்டது.தொடர்ச்சியாக இது போன்ற வழிப்பறி நடந்ததால், ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து தனிப்படை அமைத்து விசாரித்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த முகமது சல்மான் (27), மனுவர் ஆலம் (25), முகமது ஆசாத் (32), அப் துல்லா (31) மற்றும் முகமது மக்முத் ஆலம் (31) ஆகிய ஐந்து பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:50.64/60அடி நீர்வரத்து:1454கன அடி வெளியேற்றம்:1081கனஅடி மழையளவு:67மிமீ
அமராவதி அணை
நீர்மட்டம்: 87.67/90அடி.நீர்வரத்து:3051கனஅடி வெளியேற்றம்:3455கனஅடி மழையளவு:103மிமீ
விவசாயிகள் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரி போராட்டம்
அவிநாசி, ஆக.31- புதுப்பாளையம் விவசாயிகள் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய கோரி விவசாயிகள் செவ்வாய்க்கி ழமை கிராம நிர்வாக அலுவலகத்தை முற்று கையிட்டனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர் கள் கூறியதாவது: புதுப்பாளையத்தில் உள்ள பால் உற்பத் தியாளர்கள் சங்க அறைக்குள் விவசாயிகள் தனித்தனியாகப் பாலை எடை வைத்து ஊற்றி விட்டு, ஒருவர் வெளியே வந்தவுடன் மற்றொருவர் செல்வது வழக்கம். இது இங்கு மட்டும் அல்ல, அனைத்து பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திலும் நடை முறையில் உள்ளது. இந்நிலையில், அங்கு பால் வாங்குவதற்காக வந்த கருணாகரன் என் பவர், விவசாயி ஒருவர் பாலை ஊற்றி விட்டு வெளியே வருவதற்குள் உள்ளே வந்தார். அப் போது அங்கிருந்த விவசாயிகள் ஈஸ்வரன், வெங்கடாசலம் ஆகியோர் ஒருவர் வெளியே வந்தவுடன் தான் மற்றொருவர் செல்ல வேண் டும் என கூறினர். அதற்கு கருணாகரன், விவ சாயிகளிடம் தகராறில் ஈடுபட்டு விட்டுச் சென்று விட்டார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் ஈஸ்வ ரன், வெங்கடாசலம் ஆகியோர் மீது உரிய விசாரணையின்றி வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகவே விவசாயிகள் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை ரத்துச் செய்ய வேண்டும். மேலும் வன்கொ டுமை சட்டத்தைத் தவறாக பயன்படுத்திய கருணாகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி வட்டாட்சியர் ராஜேஸ் போராட்டத் தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர், இது குறித்து மனுவாக எழுதி ஆட்சியரிடம் வழங் கினால், கண்காணிப்புக் குழு மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆட்சிய ரிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகம், உரிய விசா ரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப் படும் எனத் தெரிவித்தனர்.
இளம்பெண்ணிடம் அத்துமீறல்: ஒருவர் கைது
கோவை, ஆக.31- ரேபிடோ ஆட்டோவில் சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோட்டை பகுதி யைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் கோவையில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் சென்ற இளம் பெண் கோவை திரும்ப செவ்வா யன்று இரவு தாமதம் ஆகியுள்ளது. நள்ளிரவு 12:30 மணியளவில் பேருந்து மூலம் கோவையை அடைந்த இளம் பெண் - பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் இறங்கி ரேபிடோ செயலி மூலம் ஆட்டோவை வரவழைத்துள்ளார். ஆட்டோ வந்தவுடன் ஆட்டோவில் ஏறி சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநர் இளம் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆட்டோவை நிறுத்துமாறு அந்த இளம் பெண் கூற - தொடர்ந்து ஆட்டோவை ஓட்டிச் சென்றதால் அந்த நபரிடமிருந்து தப்பிக்க முயன்ற இளம் பெண் பீளமேடு ஃபன் மால் அருகே சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவிலிருந்து வெளியே குதித்தார். இதில் தலை மற்றும் கால்களில் காயம் அடைந்தார். இதனையடுத்து தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். நண்பர்கள் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர். இது தொடர்பாக அந்த பெண் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண்ணை ஆட்டோவில் ஏற்றி அத்துமீறலில் ஈடுபட்ட நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த சாதீக் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சாதிக்கை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வழியாக செல்லும் கொச்சி ரயில் ரத்து
கோவை, ஆக.31- கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கோவை வழியாக கோர்ப்பாவுக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் ரத்து செய்யப் படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாலக்காடு ரயில்வே கோட்டம் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு மத்திய ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட நாக்பூா் அருகே கச்சேவாணி பகுதியில் சிக்னல் பராமரிப்பு மற்றும் பொறி யியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கொச்சி - கோர்ப்பா வாராந்திர விரைவு ரயில் (எண்: 22648) இன்று (1-ஆம் தேதி) மற்றும் 5 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. கோர்ப்பா - கொச்சுவேலி வாராந்திர விரைவு ரயில் ( எண்: 22647) செப்டம்பர் 3 மற்றும் 7 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.