districts

img

உதகை தாவரவியல் பூங்கா மைதானம் மூடல்

உதகை, டிச.9- நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏரா ளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும் பாலானவர்கள் உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள பல் வேறு மலர் செடிகள், பெரணி மற்றும் கள்ளிச் செடிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இது தவிர பூங்காவில் உள்ள அழகிய புல் மைதா னங்களில் ஓடியாடி விளையாடி மகிழ்கின்ற னர். இதற்காக பூங்காவில் உள்ள புல் மைதா னங்களை பூங்கா ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் பூங்கா மைதானத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட் டது. இதைத்தொடர்ந்து புல் மைதானங்களை பராமரிக்கும் பணியை தற்போது பூங்கா நிர் வாகம் தொடங்கியுள்ளது. இதற்காக பெரிய மற்றும் சிறிய புல் மைதானங்கள் மூடப்பட் டுள்ளன.