சேலம், மே 2- தீவட்டிப்பட்டியில் நடந்த கோவில் திரு விழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து கடை கள், வாகனங்களுக்கு தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியில் மாரி யம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரு கிறது. அப்பொழுது பட்டியலின மக்கள் கோவிலுக்கு உள்ளே சென்று வழிபாடு நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள னர். இதற்கு ஆதிக்கசாதியினர் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இதனையடுத்து, கோவிலில் உள்ளே சென்று வழிபடுவது குறித்த அமைதி பேச்சுவார்த்தை காடையாம்பட்டி வட்டாட்சி யர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த அமைதி பேச்சு வார்த்தையில் உடன்படிக்கை ஏற்படாததால் பேச்சுவார்த்தை நாளை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து வெளியே வந்த இரு தரப்பினரும் தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத் தத்தில் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக் கொண்டனர். தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட கடைகள் தீவைத்து கொளுத்திய நிலை யில் 10க்கு மேற்பட்ட கடைகள் சூறையா டப்பட்டது. சம்பவம் அறிந்த போலீசார் விரைந்து வந்து போலீஸ் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர். இதனால் சேலம் பெங்க ளூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாக னங்கள் மாற்று பாதையில் அனுப்பப்பட்டு தற்பொழுது நூற்றுக்கு மேற்பட்ட போலீ சார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். போலீசார், மோதலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது காவல் துறையினர் மீதும் கல் வீசப் பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தீவட்டிப்பட்டி முழுவதும் காவல் துறையினர் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், மோதலில் ஈடு பட்ட இருதரப்பினரையும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் போலீ சார் ஈடுபட்டுள்ளனர்.