சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தின் தொகுதி 4 (குரூப் 4) தேர்வில் தாராபுரம் எல்லிஸ் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற மின் பணியாளர் ராஜேந்திரனின் மகன் ஆர்.கவிமணி தேர்ச்சி பெற்று, உயர் கல்வித் துறையில் இளநிலை உதவியாளராக பணி நியமனம் பெற்றிருக்கிறார். அவருக்கு தாராபுரம் அம்பேத்கார் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் என்.கனகராஜ் பாராட்டுத் தெரிவித்தார். கவிம ணியுடன் சேர்த்து மொத்தம் நான்கு பேர் இந்த மையத்தில் பயிற்சி பெற்று இந்த ஆண்டு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 4இல் வெற்றி பெற்று அரசுப் பணி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.