திருப்பூர், செப்.14- திருப்பூர் மாவட்டம் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மாநக ராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்று வரும் குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி 2 மற்றும் 2ஏ தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் சனியன்று ஆய்வு மேற்கொண் டார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வினை திருப்பூர் மாவட்டத்தில் 15,433 பேர் தேர்வு எழுத விண்ணப்பித் திருந்தனர். இதற்காக மாவட்டத்தில் மூன்று வட்டங்களில் உள்ள 53 தேர்வு மையங்களில் சனியன்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வு நடைபெற்றது. இத்தேர் வில் 11,014 பேர் தேர்வு எழுதினர். 4419 பேர் தேர்வுக்கு வரவில்லை. இத்தேர்வினை கண்காணிப்பதற்காக 53 கண்கா ணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு நிலையிலான அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடு களை மேற்கொள்ள நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமு றைக்கு ஏற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்கு தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்தல் எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரி பார்த்தல் போன்ற பல்வேறு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார்.