districts

img

ஏற்றுக் கொண்ட ஊதியத்தை வழங்குக

கோவை, செப்.25- ஏற்றுக்கொண்ட ஊதி யத்தை வழங்கக்கோரி சிஐடியு தமிழ்நாடு குடிநீர்  வடிகால் வாரிய தொழி லாளர் சங்கம் மண்டல அள விலான பெருந்திரள் ஆர்ப் பாட்டம் கோவை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.பிரான்சிஸ் தலைமை ஏற்றார். இதில், கூட்டு குடிநீர் திட்டங்களை நிரந்தர பணியாளர்கள் மூலம்  பராமரித்து வந்த தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியம் ஆட்கள் பற்றாக்குறையால் புதியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட வில்லை. மாறாக கடந்த 2004 ஆம் ஆண்டு  முதல் ஒப்பந்த ஊழியர்கள் பணியமர்த்தப் பட்டனர். இவர்களுக்கு சட்டப்படி ஊதியம்,  போனஸ் உள்ளிட்ட எந்த சட்ட பாதுகாப்பும்  வழங்கவில்லை. மேலும், ஊழியர்களை நியமிக்காமல் 50 சதமான தொழிலாளர் களை மட்டுமே பணியமர்த்தி 8 மணிநேர வேலைக்கு பதிலாக 12 மணி நேரத்திற்கு  வேலை பணியாற்றி வருகின்றனர். இத் தொழிலாளர்களின் போராட்டத்தின் காரண மாக வேலைநேரம், ஊதியம் மற்றும் ஈ.எஸ்.ஐ, இ.பி.எப் உள்ளிட்ட உரிமைகள் பெற்றும், அமலாக்கபடாமல் உள்ளது.  தற்காலிக பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள், தினக்கூலி அடிப்படையில் ரூ.18,180 என ஊதியம் நிர்ணயம் செய் யப்பட்டன. இந்த ஊதியத்தை செப்டம்பர் மாதத்தில் வழங்க வேண்டும் என  ஆர்ப் பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர்.  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழி லாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் களான சி.அய்யப்பன், ஆர்,சரவணன், எஸ்.சி.பிரகாஷம், ஆர்.அரவிந்த், டி.குண சேகரன், மற்றும் பொன்னுசாமி, கே.கே. ஜெயபிரகாஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முன்னால் பொதுச்செய லாளர் எம்.பாலகுமார் வாழ்த்தி பேசினார். எஸ்.பிலிக்ஸ் நன்றி கூறினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு, கரூர் ஆகிய  மாவட்டங்களிலிருந்து 200க்கும் பேற்பட் டோர் கலந்து கொண்டனர்.