districts

நவீன தாராளமயக் கொள்கையால் விசைத்தறி தொழில் நலிவு

அவிநாசி, ஜன.1- நவீன தாராளமயக் கொள்கை யால் விசைத்தறி தொழில் நலி வுற்றது என சிஐடியு மாநில செய லாளர் கோபிகுமார் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழில் பாதுகாப்பு தொழிலாளர் வாழ்வுரிமை கோரிக்கை சிறப்பு மாநாட்டில், சி ஐ டி யு சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார் பேசுகையில், சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கம் துவக்கப்பட்ட 50 ஆண்டுகள் வரலாற்று சிறப்புமிக்கதாகும். பல் வேறு சங்கங்கள் இருந்தாலும், இதில் மாறுபட்ட சங்கமாக சிஐடியு  இருக்கிறது. இந்த தொழிற் சங்கத்தின் வரலாறு என்பது தியாகங்களின் வரலாறாகும். தற்போது விசைத்தறி தொழில்  என்பது மிகுந்த நெருக்கடியில் உள்ளது. விவசாயத்திற்கு அடுத்த படியான தொழில் ஜவுளி தொழி லாகும். விசைத்தறி தொழிலா ளர்கள் உரிமைகள் பெற போராட் டமே தீர்வாகும். 16 தறி இயக் கினாலும் தொழிலாளிக்கு வாழ்வா தாரம் கேள்விக்குறியாகவே உள்ளது. சோமனூர் பகுதியைச் சேர்ந்த  சம்பத் என்ற விசைத்தறி உரிமை யாளர் ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், 30 ஆண்டு களாக விசைத்தறி தொழில் செய்து  வருகிறேன். கடந்த இரண்டு வரு டங்களாக விசைத்தறி தொழில் செய்ய முடியவில்லை. என்னு டைய குடும்பம் பரிதாபமான சூழ் நிலையில் உள்ளது. வருவாய் ஈட்டி  கொடுத்த தறியினை பழைய இரும்பு கடையில் போட வேண்டிய  சூழ்நிலை உள்ளது என தெரிவித் துள்ளார். பல மாவட்டங்களில் இதே  நிலைதான் இருந்து வருகிறது. இதற்கு முழுக்க காரணம் நவீன தாராளமயமே. 

விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கு அடிப்படை தேவையான பஞ்சு உற்பத்தி தமிழகத்தில் குறைவு. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 80 சதவீதமான பஞ்சு  உற்பத்தி செய்கின்றனர். ஒன்றிய அரசு பருத்தி ஏற்றுமதிக்கு வரியை  குறைத்து விட்டனர். பருத்தி இறக்கு மதிக்கு வரியை அதிகரித்து விட் டனர். நவீன தாராளமயக் கொள்கை யின் காரணமாகத்தான் இந்த நிலை, அன்றைக்கே நவீன தாராள மயக் கொள்கையை சிஐடியு சங்கம்  எதிர்த்தது. இந்த தாராளமயக் கொள்கை காரணமாக நடுத்தர மக்கள் மிகவும்  பாதிப்படைவார்கள் என்று கூறி னோம்.  உக்ரைன்-ரஷ்யா போர் காரண மாக தொழிலாளிகள் பாதிப்படைந் துள்ளனர். உதய் மின் திட்டம் ஜெய லலிதா  இருக்கும் வரை கடுமை யாக எதிர்த்து வந்தார். ஜெயல லிதா இறக்கும்தருவாயில் ஓ. பன்னீர்செல்வம் உதய் மின் திட்டத் திற்கு கையெழுத்திட்டார். இந்த உதய் மின் திட்டம் காரணமாக மின்சார கட்டணத்தை தற்பொழுது உயர்த்தி உள்ளார்கள். உதய் மின்  திட்டம் என்பது மின்சாரத்தை சந்தை பொருள் ஆக்கும் திட்டம். தனியார்மயத்தை முழுமையாக அமல்படுத்தக்கூடிய இடமாக மின் சாரத்துறை இருந்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழக அரசு மின்சாரத்தை பொருத்தவரையில் தேர்தல் வாக்குறுதியின் போது  என்ன கூறியிருந்தனர்.

மாதந் தோறும் மின்சாரக் கணக்கு எடுப்ப தாக கூறினர். உதய் மின் திட்டம் காரணமாக மாதந்தோறும் இனி  மின் கணக்கெடுப்பு எடுக்க முடி யாது. இலவச மின்சாரத்திற்காக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. 81 பன்னாட்டு நிறுவனங்களில் சிஐடியு சங்கம் அமைக்கப்பட்டது. தொழிலாளர் விஷயத்தில் மோடி அரசாங்கம் பின்பற்றுகிற விஷயத்தை தமிழக அரசாங்கமும் அமுல்படுத்தி வரு கிறது.  விவசாயிகள், விவசாய தொழி லாளர்கள், தொழிற் சங்கத்தினர் மூன்றும் இணைந்து டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தை முன் னெடுக்க உள்ளோம். 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல்  5ஆம் தேதி டெல்லியில் பேரணி  நடத்துகிறோம். விவசாய சங்கத் தினர், விவசாய தொழிலாளர் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர் மூன்று அமைப்புகளும் சேர்ந்து நான்கு மண்டலங்களில் சென்னை, திருப்பூர், தூத்துக்குடி, நாகை மாவட்டம் வெண்மணி உள்ளிட்ட இடங்களில் கருத்தரங்கங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்தக் கருத்தரங்கில் 14 அம்ச கோரிக்கைகளை விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தொழிற் சங்கத்தினரிடம் விளக்கிப் பேச உள் ளோம், என தெரிவித்தார்.