districts

img

சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூலை 13-  தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு அளித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஊரகவளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழி யர் சங்கதினர் புதனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  கோவை ஆட்சியர் அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுல்தான் பேட்டை செல்வராஜ் தலைமை  தாங்கினார். இதில் கோவை மாவட் டத்தில் 232 கிராம ஊராட்சிகளில் வேலை செய்யும் தூய்மை காவலர்கள், ஓஎச்டி  ஆப்ரேட்டர்களுக் டிஏ உயர்வு, 7 ஆவது ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பாது காப்பு உபகரணங்கள் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைள் வலியு றுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இதில், சங்கத்தின் தலைவர் சி.பத்ம நாபன், சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.ரத்தினகுமார் ஆகியோர் விளக்க வுரையாற்றினர். இதில், சங்கத்தின் நிர் வாகிகள் ராஜாகணி, ரவிச்சந்திரன் மற் றும் தூய்மைக்காவலர்கள் திரளா னோர் பங்கேற்றனர்.