திருப்பூர், ஆக. 31 – ஆட்டோ மீட்டர் கட்டணம் மாவட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, கட்டுப்படியாகும் வகை யில் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று திருப் பூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்க மாநாடு கோரியுள்ளது. திருப்பூர் அவிநாசி சாலை தியாகி பழ னிசாமி நிலையத்தில் சனியன்று ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் டி.வி.சுகுமார் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் டி. குமார் மாநாட்டைத் தொடக்கி வைத்தார். ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சிவ ராமன் வேலையறிக்கையை முன்வைத்தார். இதையடுத்து மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும், மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் மூலம் உயர்த்தப்பட்ட கட்டணங்களைக் குறைக்க வேண்டும், காவல் துறை, போக்குவரத்து காவல் துறை அலுவலகங்கள் மூலம் விதிக்கப்படும் ஆன்லைன் அபராதக் கட்ட ணத்தைக் குறைத்து முறைப்படுத்த வேண் டும், ஆட்டோ தொழிலாளர் நலவாரிய குளறு படிகளை சரி செய்து பணப்பலன்களை உட னடியாக வழங்க வேண்டும், உடுமலை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர தலைக் காய அவசர சிகிச்சை பிரிவு, எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும், உடு மலை உள்பட அனைத்து பகுதியிலும் போக் குவரத்து காவலர்கள் அத்துமீறலை கட்டுப் படுத்த வேண்டும், ஆர்டிஓ அலுவலகங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தைக் கட்டுப்ப டுத்தி அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இம்மாநாட்டில் வயநாடு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் வழங் கப்பட்டது. இம்மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் என்.சுப்பிரமணியம் பேசினார். ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட் டத் தலைவராக டி.வி.சுகுமார், மாவட்டச் செய லாளராக எஸ்.சிவராமன், பொருளாளர் சி.பெரு மாள் ஆகியோரும், எட்டு துணை நிர்வாகிக ளும் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் 21 உறுப்பினர் கொண்ட சங்க நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் பல்வேறு பகுதி களில் இருந்து 65 ஆட்டோ தொழிலாளர் பங் கேற்றனர். தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சிவாஜி நிறைவுரை ஆற்றினார். முடிவில் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஐ.லாரன்ஸ் நன்றி கூறினார்.