சேலம், ஆக 18- ஏற்காட்டில் சாலை அமைக்க வலியுறுத்தி நீதி மன்றம் உத்தரவிட்டும் நிறைவேற்றாத சேலம் மாவட்ட நிர்வா கத்தை கண்டித்து சிஐடியு சேலம் மாவட்ட தோட்ட தொழி லாளர் சங்க சார்பில் பேரணி மற்றும் தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று நடைபெற்ற இவ்வியக்கத்தில், ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். நீதி மன்ற உத்தரவுப்படி ஏற்காட்டில் சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. சிஐடியு தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் கண்ணாடி ராஜ் தலைமையில் ஏற்காடு பேருந்து நிலையம் முதல் வட்டாட்சியர் அலுவலகம் பேரணி ஈடுபட்டனர்.பின்னர் வட்டாட்சியர் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, எ.கோவிந்தன், ஆர்.வைரமணி, மாவட்ட பொருளாளர் வி. இளங்கோ உள்ளிட்ட 17 கிராம மக்கள் கலந்து கொண்டனர்.