districts

img

சாலையோர வியாபாரிகளுக்கு கூடுதல் கடன் வழங்க கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக.29 - வங்கி கடன் வாங்கி முறையாக திருப்பி செலுத்திய சாலையோர வியா பாரிகளுக்கு கூடுதல் கடன் தொகை வழங்கக் கோரி சிஐடியு திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரி கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக வியாழனன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலை யோர வியாபாரிகள் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் அயித்தம்மா தலைமை வகித்தார்.  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பாலன், சிஐடியு மாவட்டப் பொருளா ளர் ஜி.சம்பத், சுமைப் பணி தொழிலா ளர்கள் சங்க நிர்வாகி டி.ஜெயபால், முரு கேசன், ஆட்டோ தொழிலாளர் சங்க செயலாளர் சிவராமன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினர். சாலையோர வியாபாரிகளுக்கு கடன் தொகையை முறையாக செலுத்தி னால் கூடுதல் தொகை வழங்கப்படும் என்று சொன்ன உறுதிமொழிப்படி கூடுதல் கடன் தொகை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், சாலையோர வியா பாரிகள் விற்பனை குழுவை உடனடி யாக அமைக்க வேண்டும், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு உடனடி யாக அடையாள அட்டை வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் திரளான சாலை யோர வியாபாரிகள் கலந்து கொண்ட னர்.