திருப்பூர், ஜூன் 25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பின ரும், சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளருமான கே.ரங்கராஜ் தமி ழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது: நான் வசிக்கும் 14ஆவது வார்டு பெரியார் காலனி உட்பட திருப்பூர் மாநகரின் பல பகுதிகளில் பாதாளச் சாக்கடைப் பணிகள், 4ஆவது குடி நீர் திட்டப் பணிகள், சாலை பராமரிப் புப் பணிகள் என மாறி, மாறி சாலை கள், வீதிகள் தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதனால் ஒரு வருடமாக பல முக்கிய சாலைக ளும், உட்பகுதி சாலைகளும் குண் டும், குழியுமாகவே இருக்கின்றன. மேற்கண்ட பணிகளைச் செய் கின்ற ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தப் படியான காலவரையறை, தரம் உள் ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்று வதிலும், அதற்கென பொறுப்பாக் கப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், பணிகளைக் கணக்காணிப்பதிலும், முக்கியமான சாலைகளில் காவல் துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதிலும் போதிய அக்கறை செலுத்துவதில்லை. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்ற னர். ஏராளமான விபத்துகளும் தொடர்கின்றன. குறிப்பாக, திருப்பூர் மாநக ராட்சி முதலாவது மண்டலத்திற்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் முதல் வேலம்பாளையம் வரையி லான சாலை, ஆயிரக்கணக்கான வாகனங்களும்,
பள்ளி கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் தினமும் பயன்படுத்தும் மிக முக்கி யமான சாலையாகும். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இச்சா லையில் குழாய்கள் பதிக்கும் பணிக் காக தோண்டப்படுகிறது, மூடப்படு கிறது, மீண்டும் தோண்டப்படுகி றது. இரவு பகல் தொடர்ந்து அதிக வாகனங்கள் செல்லும் இந்தச் சாலையில் போக்குவரத்தை ஒழுங் குபடுத்தாத சூழலில் ஏற்பட்ட விபத் துகளால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். கடந்த மே 27 அன்று இந்த சாலை யில் ஏற்பட்ட விபத்தில் எனது இடது கை எலும்புகள் முறிந்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சில மாதங் களாவது ஓய்வு எடுக்க வேண்டிய நிலையில் முடக்கப்பட்டுள்ளேன். என்னைப் போலவே நிறைய பேர் வெளியில் சொல்ல முடியாத நிலை யில் பாதிக்கப்பட்டு வேதனைப்படு கின்றனர். மாநகராட்சி நிர்வாகம், ஒப்பந்த தாரர்கள், போக்குவரத்துக் காவல் துறை ஆகியோர் பொது மக்களின் நலன் மீதும், பாதுகாப்பின் மீதும் அக்கறையோடு செயல்படாததால் ஏற்படும் விளைவு இது. இதனால் சராசரி பொது மக்களின் மனதில் கோபமும், அரசுக்கு எதிரான அதி ருப்தியும் உருவாகிக் கொண்டி ருக்கிறது. இந்த ஓராண்டு ஆட்சி பல தரப் பினராலும் பாராட்டப்பட்டு அரசுக்கு நற்பெயர் உருவாகும்போது, அதற்கு ஊறு விளைவிக்கும் வகையில் திருப்பூரின் பாதாளச் சாக்கடை, குடிநீர்த் திட்டம், சாலைப் பராமரிப்புப் பணிகள் ஒருங்கி ணைப்பின்றி மக்களைப் பாதித்து வருவதற்கு தீர்வு காண முதல்வர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கே.ரங்கராஜ் கேட் டுக் கொண்டுள்ளார்.