districts

img

நலவாரியம் இருக்கு... ஆனா இல்லை.. சிஐடியு கட்டுமானத் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜன. 30- கட்டுமான தொழிலாளர்கள் நல  வாரிய ஆன்லைன் சர்வர் முடக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை கண் டித்து சிஐடியு கட்டுமான தொழிலா ளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் ஆன்லைன் சர்வர் முடக்கம் காரணமாக கடந்த இரண்டு மாத காலமாக நல வாரிய  பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக் கள் ஓய்வூதியம் எதுவும் நடைபெற வில்லை. இந்நிலையில் இதர துறை களின் சர்வர்கள் மட்டும் சரியாக இயங்கும் போது கட்டுமான நல  வாரிய ஆன்லைன் சர்வர் மட்டும் ஏன் சரியாக செயல்படுவதில்லை?. 2022 ஆம் ஆண்டு மட்டும் பத்து  முறைக்கும் மேல் சர்வர் முடக்கப் பட்டது ஏன்?. கட்டுமானத் தொழிலா ளிக்கு ஓய்வூதியம் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பணப்பயன்கள் கொண்டு போய் சேர்க்க தடை செய்வது எதனால்?, கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூ தியம் ரூ3 ஆயிரமாக உயர்த்த வேண்டும், வீடு கட்டும் கட்டுமான  தொழிலாளர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன.  சிஐடியு சார்பில் ஈரோடு தொழி லாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு மாவட்ட தலைவர்  எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித் தார். மாவட்ட உதவி தலைவர் என். முருகையா சிறப்புரையாற்றினார். கட்டுமானத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.மாதவன்,  பவானி தாலுக்கா பொது தொழிலா ளர் சங்கச் செயலாளர் ஏ.ஜெகநா தன், ஆட்டோ தொழிலாளர் யூனி யன் பொது செயலாளர் கண்மணி (எ) ஷேக்தாவூத் மற்றும் ஏரளா மான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சிஐடியு மாவட்ட பொருளாளர் கே.கே.செந் தில்குமார் நன்றி கூறினார்.  கோவை கோவை தெற்கு வட்டாட்சியர்  அலுவலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட  தலைவர் கே.மனோகரன், செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொரு ளாளர் ஆர்.வேலுசாமி, மாவட்ட  துணை செயலாளர் கே.ரத்தின குமார், மாவட்டத் துணைச் செயலா ளர் ஆர்.ராஜன், கோவை மாவட்ட  கட்டுமான தொழிலாளர் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் எம்.முருகை யன், மாநில குழு உறுப்பினர் ஜி. லதா உள்ளிட்ட திரளனோர் பங்கேற் றனர்.