நாமக்கல், டிச.14- நலவாரியத்தில் ஏற்படும் குளறுபடி களை விரைந்து களைய நடவடிக்கை எடுக்க வேண்டும், என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐ டியு) நாமக்கல் மாவட்டக்குழு கூட்டம், மாவட் டத் தலைவர் எம்.அசோகன் தலைமை யில், எலச்சிபாளையத்தில் சனியன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில், தொழிலாளர் நல வாரியங்களில் கடந்த சில வருடங்களாகவே ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது, பதிவு மற்றும் பணப்பயன்கள் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஆன்லை னில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை விதிமுறை களை மாற்றம் செய்து, பதிவேற்றம் செய்வ தால், வாரிய பயன்கள், பதிவு செய்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. கடந்த 2 வார மாக நலவாரியத்தில் ஆன்லைனில் பதிவு செய்த பின்னர், பரிசீலனையில் இருக்கும் போது, காலம் தராமல் டிமோடு தள்ளுபடி என வருகிறது. பதிவு செய்யப்பட்ட தொழி லாளர்களுக்கு இது ஏமாற்றத்தை தருகிறது. இதுபோன்ற குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விரைவில் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இக்கூட்டத்தில், சிஐடியு மாவட்டச் செய லாளர் ந.வேலுசாமி, பொருளாளர் எம்.ரங்க சாமி, துணைத்தலைவர்கள் எல்.ஜெயக் கொடி, வி.கண்ணன், துணைச்செயலாளர் கள் கோ.ஜெயராமன், சு.சுரேஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.