districts

img

அவிநாசியில் சிஐடியு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அவிநாசி, மார்ச் 14 – அவிநாசியில் சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கம், பேரூராட்சி ஊழியர் சங்கம் உள்ளிட்டு சங்கங்கள் செவ் வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேரூ ராட்சிகளிலும் அவுட் சோர்சிங் முறையை  கொண்டு வரும் அரசாணை எண் 139 ஐ  வாபஸ் வாங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சி  உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் மற்றும்  பேரூராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அவிநாசி பேரூ ராட்சி அலுவலகம் முன்பு  நடைபெற்றது.  ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்  சங்க மாவட்டத் தலைவர் பி.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில்  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட  இணை  செயலாளர் ராமன், வட்ட கிளை செயலாளர் கருப்பன், விசைத்தறி தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பழ னிச்சாமி  உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.