தருமபுரி, அக்.26- ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இ- டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும், தொழிற்சங்கங் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போனஸ், சட்டபடி அனைத்து பொறி யாளர், தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டம், பிபி.2 வை ரத்து செய்யவேண்டும். 2019 டிசம்பர் 1 ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த பணியாளர்களுகு 6 சதவிகிதம் ஊதிய உயர்வு சட்ட சலுகைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப் பட்டது. தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கோட்டத் தலைவர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, பாலக்கோடு கோட்டச் செய லாளர் கோவிந்தன், நிர்வாகிகள் பொன்னுத்துரை ஆர்.முருகேசன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். மின்வாரிய பொறியாளர் அமைப் பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தர மூர்த்தி வாழ்த்தி பேசினார். இதில், திர ளானோர் பங்கேற்றனர். கோவை இதேகோரிக்கைகளை வலியு றுத்தி, கோவை டாடாபாத் மின்வாரிய மத்திய அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு பி.காளிமுத்து தலைமை ஏற் றார். இதில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள், வி. மதுசூதனன், சுரேஷ், சாதிக்பாட்ஷா ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். இதில், சங்கத்தின் நிர் வாகிகள் சென்னியப்பன், தண்ட பாணி, தி.பழனிச்சாமி, பத்பநாபன், மீனாட்சி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.