districts

img

வறண்டு காணப்படும் காவிரி ஆறு

நாமக்கல், பிப்.16- பள்ளிபாளையம் வழியாக செல்லும் காவிரி ஆறு தற்போது வறண்டு காணப்படு வதால், ஆற்றுப்பகுதியில் படர்ந்துள்ள ஆகா யத்தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வழியாக காவிரி ஆறு செல்கிறது. மேட்டூர் அணையிலிருந்து நீர் அதிகளவு திறக்கப் படும் நாட்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படு வது வழக்கம். மேலும், ஓடப்பள்ளி கதவ ணைப் பகுதியில் நீர் தேக்கி வைக்கப்பட்டு மின்சாரம் எடுக்கப்படுவதால், எப்போதும் காவிரி ஆறு அதிகளவு நீர் சூழ்ந்து காணப் படும். மேலும், பள்ளிபாளையம் வட்டாரம் முழுவதும் மற்றும் திருச்செங்கோடு நகராட்சி மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து குழாய் கள் மூலமாக குடிநீர் எடுக்கப்படுகிறது. இந் நிலையில், மேட்டூர் அணையிலிருந்து திறக் கப்படும் நீரின் அளவு குறைந்ததால், பள்ளி பாளையத்தில் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து பாறைகள் தென்படுகி றது. இதனிடையே காவிரி ஆற்றை சுற்றிலும் அதிகளவு இருந்த ஆகாயத்தாமரை செடிகள் தற்போது காவிரி கரையோர பகுதிகளில் படர்ந்துள்ளன. எனவே, போர்க்கால அடிப்ப டையில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.