districts

img

சாதி ஒழிப்பு மாவீரர்கள் நாள் கருத்தரங்கம்

கோவை, நவ.27- கோவையில் சாதி ஒழிப்பு மாவீரர்கள் நாள் கருத்தரங்கம் தந்தை பெரியார் திரா விடர் கழகம் சார்பில் நடைபெற்றது. 1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி யன்று சாதி ஒழிப்பிற்காக மாபெரும் போராட் டம் நாடு முழுவதும் நடைபெற்றது. இப் போராட்டத்தில் இந்திய சட்ட பிரிவுகள் சில வற்றை சாதியை பாதுகாப்பது போல் உள்ளது எனக்கூறி, அதனை எரிக்கும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது அதில் சுமார் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை களில் பலர் உயிரிழந்தனர். இதனிடையே அந்தப் போராட்டத்தில் மரணம் அடைந்த வர்களுக்கு ஆண்டுதோறும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சனி யன்று சாதி ஒழிப்பு மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.  இந்நிலையில், கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தந்தை  பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கருத்த ரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தந்தை  பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமை வகித்தார். பேராசிரியர் சாரோன் சிறப்புரையாற்றினார். இதில், தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி, வெளியீட்டு செயலாளர் மனோகரன் உட் பட பெரியாரிய உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.