districts

img

தற்கொலைக்கு தூண்டிய பாஜகவினர் மீது வழக்குபதிவு

திருப்பூர், பிப்.5 - திருப்பூரில் ஒருவரை பெட்ரோல்  ஊற்றி தற்கொலைக்கு தூண்டிவிட்ட தாக பாஜகவை சேர்ந்த கெளதம் மற்றும்  ரகு ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  திருப்பூரில் அனுமதி இல்லாமல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்துமுன்னணி தலை வர், பாஜக கவுன்சிலர் உட்பட 300க்கும்  மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் கோவில் விவகா ரம் தொடர்பாக செவ்வாயன்று போராட் டத்தில் கலந்து கொள்ள திருப்பூரில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்துமுன்னணியினர் கைது  செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து, திருப்பூர் தாராபுரம் சாலை சந்தி ராபுரம் செக் போஸ்ட் அருகே சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் தாராபுரம் சாலை யில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  மேலும் இந்து முன்னணி இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் ஹெல் மெட் அணியாமல் 3 பேராக கோஷம் எழுப்பியவாறு வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர். அனுமதி இல்லா மல் ஒன்று கூடி பொது மக்களுக்கு இடை யூறு ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட  இந்து முன்னணி மாநிலத்தலைவர் உள்பட 289 பேர் மீது திருப்பூர் மாந கர போலீசார் வழக்கு பதிவு செய்த னர்.  மேலும், மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட 40 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது  நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து  சம்பவத்தன்று பெட்ரோல் ஊற்றி தற் கொலைக்கு தூண்டிவிட்டதாக கெளதம், ரகு ஆகியோர் மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.