districts

img

தொழிற்சாலை கழிவுகளை கொட்டிய வாகனம் சிறைபிடிப்பு

உடுமலை, டிச.21-  உடுமலை அருகே வெளிமாநில தொழிற்சாலை கழிவுகளை விளைநிலங்களில் கொட்டிய வாக னத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். உடுமலை ஊரட்சி கண்ணமநாயக்கனூர், போடி பட்டி மற்றும் கணக்கம்பாளையம் மூன்று ஊராட்சி களின் எல்லை பகுதி புதிய குடியிருப்பு பகுதியாக வும், விளைநில பகுதியாகவும் உள்ளது. இந்நிலை யில், இப்பகுதியில் இரவு நேரங்களில் தொழிற்சாலை கழிவுகளை மர்ம நபர்கள் வீசி செல்வது தொடர் கதை யாக இருந்த வந்தது. இந்நிலையில், செவ்வாயன்று மதியம் நான்கு சக்கர வாகனத்தில் பல கேன்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்கள்.  அதனை தொடர்ந்து, வாகனத்தில் இருந்தவர் களிடம் பிடித்து விசாரித்தபோது, மகாராஷ்டிர மாநி லத்தில் செயல்படும் பீர் தொழிற்சாலையின் கழிவு களை கண்ணமநாயக்கனூர் பகுதியில் உள்ள குடோ னில் வைத்து சாலைகளில் கொட்டுவது தெரியவந்தது. மேலும், இந்த குடோன் ஊராட்சி மற்றும் சுற்றுசூழல் துறையின் அனுமதி பெறாமல் இயங்கி வந்ததும் விசா ரணையில் தெரியவந்துள்ளது.