districts

img

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்க அனைத்துத்துறை ஓய்வூதியர் தர்ணா

திருப்பூர், செப். 20 – திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, புதிய ஓய்வூதியத் திட் டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதி யத் திட்டத்தை அரச நிறைவேற்ற  வலியுறுத்தி தமிழ்நாடு அரசு  அனைத்துத்துறை ஓய்வூதியர் சங் கம் திருப்பூரில் அரை நாள் தர்ணா  போராட்டம் நடத்தியது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பாக செவ்வாயன்று காலை தொடங்கிய இந்த தர்ணா போராட்டத்தை அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ. நிசார் அகமது தொடக்கி வைத்தார்.சங்கத்தின் மாவட்டத் தலைவர் க. சண்முகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.மணிவேலு வர வேற்றார். புதிய ஓய்வூதியத் திட் டத்தை ரத்து செய்ய வேண்டும், சத்து ணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம  ஊழியர், வனத்துறை காவலர் மற்றும்  ஊராட்சி செயலர் உள்ளிட்ட அனை வருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 அறவிக்க வேண்டும்,

முடக் கப்பட்ட அகவிலைப்படி நிலுவை களை வழங்க வேண்டும், ஜனவரி, ஜூலை என உரிய காலத்தில் வழங்க  வேண்டும் 70 வயதை எட்டும் ஓய்வூதி யருக்கு 10 சதவிகிதம் ஓய்வூதிய  உயர்வு வழங்க வேண்டும் பெருந் தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான இரயில் போக்குவரத்து சலுகையை மீண்டும்  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை விளக்கி மாவட்டச் செயலா ளர் சோ.பாலகிருஷ்ணன் பேசினார்.  ஓய்வுபெற்ற ஆசிரியர் நல அமைப் பின் மாவட்டத் தலைவர் எம்.நாட்ரா யன், அரசுப் போக்குவரத்துக் கழக  ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.செல்வராஜ், அரசு ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் எம்.பாலசுப்பி ரமணியம், மின்வாரிய ஓய்வுபெற் றோர் அமைப்பின் செயலாளர் பி.இ. அச்சுதன், பிஎஸ்என்எல் ஓய்வு பெற் றோர் அமைப்பின் மாவட்டத் தலை வர் பா.சௌந்தரபாண்டியன் உள் ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். சங்கத் தின் மாநில துணைத் தலைவர் என். அரங்கநாதன் சிறப்புரை ஆற்றினார். இதில் பெண் ஓய்வூதியர்கள் உள் பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்டப் பொருளாளர் கி.மேகவர்ணன் நன்றி  கூறினார்.