districts

img

ஊரக வேலைத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் பிரச்சாரம்

உடுமலை, ஜூலை 26 - ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடு தல் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் குடிமங்கலம், வரதராஜபு ரம் மற்றும் கோட்டமங்கலம் ஊராட்சி பகுதிகளில் வியாழனன்று மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் குடிமங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.ஓம்பிர காஷ் தலைமையில் நடைபெற்ற மக்கள்  சந்திப்பு இயக்கத்தில், குடிமங்கலம் ஒன் றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அதிகாரிகளின் அலட்சியத்தால் குடிநீர்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்ச னைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப் புற மக்களின் வாழ்வாதாரமாக இருக் கும் ஊராக வேலை திட்டத்தின் அனை வருக்கும் வேலை மற்றும் உரிய சம்ப ளம் வழங்க வேண்டும். இளைஞர்க ளின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச் சாரங்கள், தடை செய்யப்பட்ட போதை  பொருள்களை விற்பனை செய்பவர் கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி விவசாயி களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை – நல்லாறு அணை திட் டத்தை நிறைவேற்றி, பிஏபி பாசனத்தை  முழுமையடைய செய்ய வேண்டும். பொது மக்களை பாதிக்கும் மின் கட்டண  உயர்வை தமிழ் நாடு அரசு உடனடியாக  திரும்ப பெற வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் வலியுறுத்தப்பட் டது. முன்னதாக நடைபெற்ற இயக்கத் தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் என். சசிகலா, ஒன்றியக்குழு உறுப்பினர் வெ. ரங்கநாதன் மற்றும் கிளைச் செயலாளர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார் கள்.