கோவை, பிப்.12- கோவை உள்ளூர் திட்டப் பகு திக்கான மாஸ்டர் பிளான் குறித்து பொதுமக்கள் ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரி விக்கலாம் என அறிவிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை உள்ளூர் திட்ட பகுதிக்கான மாஸ்டர் பிளான் திட்டமானது, கடந்த 12.10.1994 ஆம் ஆண்டு மாநகராட்சி, 7 பேரூராட்சிகள் மற்றும் 87 ஊராட்சி களை உள்ளடக்கிய 1,287 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில், தற் போதைய அரசு பொறுப்பேற்றதும் ஏற்கெனவே இருந்த பகுதியுடன் 23 கிராம ஊராட்சிகள் மற்றும் குறிச்சி புதுநகர் வளர்ச்சி குழும பகுதியினையும் சேர்த்து, மாநக ராட்சி, 4 நகராட்சிகள், 21 பேரூ ராட்சிகள் மற்றும் 66 கிராம ஊராட் சிகளை இணைத்து 1531.57 சதுர கிலோ மீட்டா் பரப்பளவுடன் விரி வாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்திய எல்லையுடன், கோவை உள்ளூர் திட்டப் பகுதிக் கான வரைவு மாஸ்டர் பிளான் திட் டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப் பிக்கப்பட்டு இணக்கம் பெறப்பட் டுள்ளது. அரசால் இணக்கம் பெறப் பட்டுள்ள கோவை மாஸ்டர் பிளான் திட்டம் குறித்து எந்த ஒரு நபரும், தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2 மாத காலத்திற்குள் ஆட்சேபணைகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். பொது மக்கள் இணையதள முகவரி மூலமாகவும் மற்றும் க்யூ.ஆர். குறியீடு மூலமாகவும் மாஸ்டர் பிளான் திட்டத்தின் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து முழுமைத்திட் டம் தொடர்பாக ஏதேனும் ஆட்சேப ணைகள் மற்றும் ஆலோசனைக ளைத் தெரிவிக்கலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.