districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வாங்குவோர் விற்போர் சந்திப்பு: 115 கோடி டாலருக்கு புரிந்துணர்வு

கோவை, நவ.8- கோவை கொடிசியாவில் இரு தினங்களாக நடைபெற்ற சர்வதேச வாங்குவோர் விற்போர் சந்திப்பு நிகழ் வில், 115 கோடியே 35 லட்சத்து 50  ஆயிரம் அமெரிக்க டாலருக்கு புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள் ளது. கோவை கொடிசியா வர்த்தக அரங் கில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக் காக, சர்வதேச வாங்குவோர்- விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி இரு தினங்களாக நடை பெற்றது. இதில் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தொழில் முனைவோர் பங் கேற்று இருந்தனர். நிறைவு நாளான வெள்ளியன்று மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை  அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பல்வேறு நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங் களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறு,குறு  மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் துறை அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், தொழில் ஆணை யர் இல.நிர்மல்ராஜ், மாவட்ட ஆட்சி  யர் கிராந்தி குமார்பாடி மற்றும் தொழில் முனைவோர் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பர சன், இந்நிகழ்ச்சியில் 115 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டால ருக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. முதல் முறையாக ஏற்றுமதியாளர்களிடம் இருந்து பொருட் கள் கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவை மாநிலத்தின் எம்எஸ்எம்இ தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக் கும், என்றார்.

விதிகளை மீறிய  30 வாகனங்களுக்கு அபராதம்

நாமக்கல், நவ.8- போக்குவரத்து விதி களை மீறிய 30 வாகனங்க ளுக்கு அதிகாரிகள் அபரா தம் விதித்தனர். நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர், நாமக்கல் – பர மத்தி சாலை, கீரம்பூர் சுங்கச் சாவடி ஆகிய இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது, அதிக பாரம் ஏற்றி  சென்ற 5 கனரக வாகனங்கள் உள்ளிட்ட 30 வாகனங்க ளுக்கு சோதனை அறிக்கை  வழங்கப்பட்டது. மேலும், வரி செலுத்தாமல் இயக்கப் பட்ட ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டது. விதிமீறி  இயக்கப்பட்ட வாகனங்க ளுக்கு ரூ.30 ஆயிரம் அபரா தம் வசூல் செய்யப்பட்டது. அறிக்கை வழங்கப்பட்ட 30  வாகனங்களுக்கு, ரூ.1.90 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.

307 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

சேலம், நவ.8- சேலம் சரகத்தில் கடந்த 10 மாதத்தில் சாலை விபத் தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 307 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. சாலை விதிகளை மீறுவோருக்கு 3 மாதம் ஓட்டுநர்  உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட காவல் துறையினர், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது  வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதில், போதையில் வாகனம் ஓட்டியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிமாக  ரத்து செய்ய அந்தந்த மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், தருமபுரியில் கடந்த 10 மாதத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 307 பேரின் ஓட்டுநர் உரிமம் தற் காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உரிமம், தகுதிச் சான்றி தழ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், அந்த வாக னங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன, என்றனர்.

360 கிலோ புகையிலை பறிமுதல்

கோவை, நவ.8- சூலூர் பகுதியில் சுமார் 360 கிலோ புகையிலை பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டது.  கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட பகுதியில், தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்து இருப்பதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இட மான முத்து கவுண்டன் புதூரில் போலீசார் சோதனை மேற் கொண்டனர். அங்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் பாண்டி (39) என்பவர் சுமார் ரூ.3லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 360 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதனைய டுத்து, புகையிலை மற்றும் நான்கு சக்கர வாகனத்தை பறி முதல் செய்து கைது செய்தனர்.

கூடுதல் ரேசன் பொருட்கள் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

திருப்பூர், நவ. 8 – திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் வெளி மாவட்ட மக்க ளுக்கு விநியோகம் செய்வதற்காக நியாயவிலைக் கடைக ளுக்கு கூடுதல் பொருட்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்  என்று திருப்பூர் மாவட்ட சிஐடியு கூட்டுறவுப் பணியாளர் சங் கம் கோரியுள்ளது. திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கத் தலைவர்  ப.கௌதமன் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு வெள்ளிக்கி ழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் குறிப்பாக மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட  நியாயவிலைக் கடைகளில் மாதந்தோறும் 20ஆம் தேதியே  பொருட்கள் இருப்பு இல்லா நிலை ஏற்படுகிறது. இதனால் விற் பனையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே வாக் குவாதம் ஏற்பட்டு ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின் றனர். இம்மாவட்டத்தில் வெளி மாவட்ட மக்கள் அதிகம் வசிக் கின்றனர். எனவே மாவட்டம் முழுவதும் நியாயவிலைக் கடை களுக்கு வெளிக்கொணர்வு மூலம் வழங்கப்படும் குடும்ப அட் டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஒதுக்கீடு வழங்கும் படி சிஐடியு சார்பில் வலியுறுத்தியுள்ளனர்.

இலவச போட்டித் தேர்வு வகுப்பில் படித்த மூவர் வெற்றி

உடுமலை, நவ.8- உடுமலையில் இலவச போட்டித் தேர்வு வகுப்பில் படித்த  மூன்று மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். தமிழக அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு படிக்கும்  மாணவர்களுக்கு உடுமலை ராஜேந்திரா வீதியில் செயல்ப டும் அரசு பள்ளி வளாகத்தில் அரசின் சார்பில் இலவச வகுப்பு கள் நடத்தப்படுகிறது. இந்த வகுப்பில் படித்த சந்தோஷ்கு மார், மாலதி, நந்தகுமார் ஆகிய மூன்று மாணாக்கர்கள் தேர்ச்சி  பெற்று உள்ளார்கள். இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், ஏழை  குழந்தைகளின் கனவுகளை நனவாக்கும் வகையில் தமிழக அரசு நடத்திய இலவச வகுப்புகளில் கடந்த வரு டம் முதல் பல மாணவர்கள் வெற்றி பெற்று அரசு பணியில்  சேர்த்து உள்ளார்கள். போட்டித் தேர்வுகளுக்கு படிக்க பல  லட்சம் செலவு செய்து தனியார் நிறுவனத்தில் படிக்க முடியாத  மாணவர்கள் பயன்படும் வகையில் வகுப்புகளை ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கும், முறையாக வகுப்புகளை எடுத்து  வாரம் ஒரு நாள் வகுப்பில் தேர்வுகளை நடத்தி அதில் முதல்  மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி உற்சா கப்படுத்திய வகுப்பு ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் வாழ்த் துக்கள் தெரிவித்தார்கள்.

அமரன் திரைப்படத்தை எதிர்த்து போராட்டம்: 50 பேர் கைது

திருப்பூர், நவ. 8 - திருப்பூர் உஷா திரையரங்கம் முன்பாக அமரன் திரைப்ப டத்தை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய எஸ்டி பிஐ கட்சியினர் 50 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். அமரன் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டதற்காக, கமலஹாசன், உதயநிதி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் படங்கள் இடம் பெற்றிருந்த பதாகைகளைக் கிழித்து முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்ட 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது  செய்தனர்.

வங்கதேச வாலிபர் கைது

திருப்பூர், நவ. 8 – திருப்பூர் மாநகராட்சி ஆத்துப்பாளையம் ரோடு பகுதியில்  வெளிநாட்டு வாலிபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில்  தங்கியிருப்பதாக 15 வேலம்பாளையம் காவல் துறையின ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர்  அங்கு சென்று சந்தேகத்திற்குரிய வாலிபரைப் பிடித்து விசா ரணை செய்தனர். இதில் அவர் வங்கதேசத்தைச் சேர்ந்த சஞ் சன் சந்தர் பர்மான் (வயது 33) என்பது தெரியவந்தது. அவர்  உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி இருந்ததும், கடந்த ஐந்து மாதங்களாக வேலம்பாளையம் சாலையில் உள்ள ஒரு பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சஞ்சன் சந்தர்  பர்மானை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து  சஞ்சன் சந்தர் பர்மானை காவல் துறையினர் கைது செய்து,  அவரை சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

மண் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மனு

பொள்ளாச்சி, நவ.8- மண் சாலையை சீரமைத்து, தார்ச்சாலை யாக மாற்றித்தர வேண்டும் என வலியு றுத்தி, பெள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று விவ சாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆச்சிபட்டி கிளை சார்பில், குரும் பபாளையம் பகுதியில் உள்ள அரசு புறம் போக்கு மண் பாதையை சீரமைத்து, தார்ச் சாலை அமைத்து தர வேண்டும் என வலியு றுத்தி சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது. இந்நிகழ்வில், சிபிஎம் ஆச்சிபட்டி கிளைச்  செயலாளர் மாதீஸ்வரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி கே.ஏ. பட்டீஸ்வரமூர்த்தி, விவசாயிகள் சங்க தாலு காச் செயலாளர் ஸ்டாலின் பழனிசாமி, தாலு காத் தலைவர் அப்பாவு ஆகியோர் கலந்து  கொண்டனர்.

பட்டறை உரிமையாளர் பட்டப்பகலில் கொலை

சேலம், நவ.8- சேலத்தில் பட்டப்பக லில் பீரோ பட்டறை உரிமை யாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், சுக்கம் பட்டி அருகே உள்ள வெள் ளியம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் சரவணன் (46). இவரது மனைவி வனிதா (40). இவர் கள் வெள்ளாளம்குண்டத் தில் வெள்ளியன்று காலை  தங்களுடைய சரக்கு ஆட் டோவில் வெள்ளாளம்குண் டம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். அரூர் மெயின் ரோடு பனங்காடு பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது, இவர்களின் வாக னத்திற்கு பின்னால் சொகுசு காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் சரக்கு ஆட் டோவை மறித்தது. இதன் பின் ஆட்டோவிலிருந்த சர வணனை சாலையில் இழுத்து போட்டு சரமாரி யாக வெட்டி படுகொலை செய்தனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலி யானார். இதுகுறித்து தகவ லறிந்து சம்பவ இடத்துக்கு  வந்த காவல் துறையினர் சர வணன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

பேருந்து பழுது: போக்குவரத்து பாதிப்பு

பேருந்து பழுது: போக்குவரத்து பாதிப்பு நாமக்கல், நவ.8- பள்ளிபாளையத்தில் அரசு பேருந்து பழுதாகி நடு வழி யில் நின்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து ஈரோடு நோக்கி  செல்வதற்காக 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு வெள்ளியன்று காலை அரசு பேருந்து ஒன்று வந்து  கொண்டிருந்தது. பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதி  அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக, பேருந்தின் முன் பக்க டயர் பஞ்சராகி நடு சாலையில் நின்றது. மிகக்குறுக லான சாலையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால், பின்புறம் வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.