புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம் நாமக்கல், மார்ச் 8- திருச்செங்கெபட்டிலி ருந்து கோவைக்கு புதிய வழித்தடத்தில் இயக்கப் பட்ட பேருந்து பொதுமக் கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு, கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் கோவைக்கு கல்லூரி, மருத்துவத்தேவைகளுக்கு செல்ல ஈரோடு அல்லது திருச்செங்கோடு வந்து, ஈரோடு வழியாக செல்ல வேண்டி இருந்தது. இதனால் நேர விர யம் ஏற்பட்டு வந்தது. எனவே, திருச்செங்கோட்டில் இருந்து கொக்கராயன்பேட்டை வழியாக பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்காக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், சட்ட மன்றத்தில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அனுமதி கொடுத்ததின் பேரில், புதிய பேருந்து புதிய வழித்தடத்தில் இயக்க துவக்க விழா நிகழ்ச்சியானது திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் நடைபெற் றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, அட்மா தலை வர் வட்டூர் தங்கவேல் ஆகியோர் கொடியசைத்து பேருந்து இயக்கத்தை துவக்கி வைத்தனர். தங்கள் ஊர் வழியாக வந்த பேருந்துக்கு கொக்கராயன் பேட்டை பகுதியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு கொடுத்தனர். கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட கிராமப்புற பகுதி களைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை செல்ல வேண்டு மெனில், கொக்கராயன்பேட்டையில் இருந்து ஈரோடு சென்று அதன் பிறகு கோவை செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது, புதிய வழித்தட பேருந்து இயக்கப் படுவதால் அலைகழிப்பு குறைவு, நேர மிச்சம் ஆகி யவை ஏற்படுவதால் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வும், தமிழக அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் பொதுமக்கள் தெரி வித்தனர்.