அவிநாசி, ஜூன் 13- திருமுருகன்பூண்டி நகராட்சி யில் பல நாட்களாக குடிநீர் விநியோ கிக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டனர். குடிநீர் கேட்டு வந்தவர்களிடம் நகராட்சி தலைவருடன் இருந்தவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ரகளையில் ஈடு பட்டனர். திருமுருகன்பூண்டி நகராட்சிக் குட்பட்ட துரைசாமி நகர், துரைசாமி நகர் விரிவு, விநாயகா கார்டன், விநா யகா கார்டன் விரிவு, தன்வர்ஷினி நகர், முல்லை நகர், மகாலட்சுமி கார் டன், எம்ஜிஆர் நகர், என்எஸ்பி. நகர், ஏவிபி லட்சுமி அம்மாள் லேஅவுட் உட்பட 4,5,8,9 ஆகிய வார்டு பகுதிக ளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்க ளுக்கு தொடர்ந்து ஆறு மாத கால மாக, 20 முதல் 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக் கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் குடிநீர் விலைக்கு வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர். இந்நிலையில் 25 நாட்கள் கடந்த ஆகியும் தண்ணீர் விநியோகிக்கப் படவில்லை. இதையடுத்து, பொது மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். ஏற்கனவே மே 25 ஆம் தேதி அப்பகுதி மக்கள் இதே கோரிக் கையின் பேரில், நகராட்சி ஆணை யரை முற்றுகையிட்ட போது சில தினங்களுக்குள் குடிநீர் கிடைத்து விடும் என்று உறுதி கூறப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது. இருப்பினும் குடிநீர் பிரச் சனை தீர்க்கப்படாததால் மீண்டும் திங்களன்று நகராட்சி தலைவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது, நகராட்சி தலைவருடன் இருந் தவர்கள் குடிநீர் கேட்டு வந்த பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் குடிநீர் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதை யடுத்து, காவல்துறையினர் பொது மக்களை சமாதானம் செய்து சில நாட் களுக்குள் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று கூறியதைய டுத்து போராட்டம் கைவிடப்பட்டது.