திருப்பூர், பிப். 24 - தொழிலாளர், விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக டில் லியில் ஏப்ரல் 5ஆம் தேதி தொழிலாளர், விவசாயிகள் அமைப்புகளின் பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூ ரில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்க ளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. வெள்ளியன்று காலை பிரதான தொலைபேசி நிலையம் முன்பாக நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்க திருப்பூர் கிளைச் செயலாளர் விஸ்வநா தன் முழக்கங்கள் எழுப்பினார். பொதுத்துறை நிறுவனங்களை அடி மாட்டு விலைக்கு தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோத சட்டங் களை ரத்து செய்ய வேண்டும், விவசாயி களுக்கு உறுதியளித்தபடி குறைந்த பட்ச ஆதார விலை உத்தரவாதத்திற்கு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இது குறித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்க முன்னாள் மாநில நிர்வாகி எஸ்.சுப்பிரமணி விளக்கிப் பேசினார். ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் மாநில நிர் வாகி ஜாபர் உள்ளிட்டோர் பேசினர். நிறைவாக தொலைத் தொடர்பு ஒப் பந்த ஊழியர் சங்கத்தின் மாநில நிர் வாகி ரமேஷ் நன்றி கூறினார்.