கோவை, டிச. 17 – பென்சன் மாற்றம், மருத்துவபடி மற்றும் மருத்துவ நிலுவை பலன்களை விரைவில் வழங்க வலியுறுத்தி கோவையில் செவ்வாயன்று பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தர்ணா போராட் டத்திற்கு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.ராஜா தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி உமாபதி தர்ணா போராட்டத்தை துவக்கிவைத்து உரையாற்றினார். அகில இந் திய துணை பொருளாளர் பங்கஜவள்ளி சிறப்புரையாற்றி னார். போராட்ட கோரிக்கைகள் குறித்து மாவட்ட செய லாளர் வெங்கட்ராமன் உரையாற்றினார். இதில் ஏராளமான பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் பங்கேற்று கோரிக்கைகள் குறித்த முழக்கங்களை எழுப்பினர்.