பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு திங்களன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் என்.சுபேதார் தலைமையில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாவட்டசெயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் ஏ.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.