districts

img

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜுலை 2- ஓய்வூதிய உயர்வு கோரிக்கை முன் வைத்து பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஈரோட்டில், அகில இந்திய பிஎஸ் என்எல்-டிஓடி பென்சனர் சங்கத்தின்  சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், கடந்த 1.1.2017 முதல் ஓய்வூதிய  மறுநிர்ணயம் செய்ய வேண்டும். 15  விழுக்காடு ஓய்வூதிய உயர்வு வழங்க  வேண்டும். சம்பள மாற்றத்தை ஓய்வூ திய மாற்றத்தோடு இணைக்கக்கூ டாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டது.  இதில், தலைவர் பி.சின்னச்சாமி தலைமை தாங்கினார், மாவட்டச் செய லர் என்.குப்புசாமி மற்றும் நிர்வாகிகள்  எல்.பரமேஸ்வரன், சி.பரமசிவம், அஞ் சல் ஓய்வூதியர் சங்கச் செயலர் என்.ராம சாமி ஆகியோர் கருத்துரையாற்றினர். முடிவில் பொருளாளர் வி.மணியன் நன்றி கூறினார்.