சேலம், மார்ச் 27- மேட்டூர் அருகே ராட்சத குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக் கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து காடையாம்பட்டி பகு திக்கு நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஓம லூர், காடையாம்பட்டி, தொப்பூர், தாரமங்க லம், மேச்சேரி பகுதிகளுக்கு குடிநீர் வடி கால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண் ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நி லையில், அனல்மின் நிலையம் செல்லும் சாலையில் காடையாம்பட்டி ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 நாட்க ளாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகி றது. தற்போது கோடைகாலம் என்பதால் குடி நீர் பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலை யில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள் ளது அப்பகுதி மக்கள் மத்தியில் கவ லையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, குழா யில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண் ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.