districts

img

கோவையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்

கோவை, ஜன.20- தமிழகம் முழுவதும் வியாழனன்று பூஸ்டர் தடுப் பூசி முகாம் நடத்தப்பட்டது.  இதன் ஒரு பகுதியாக கோவையிலும் பூஸ்டர் தடுப் பூசி முகாம் நடைபெற்றது. கோவை அரசு மருத்துவ மனை, இ.எஸ்.ஐ மருத்துவ மனை, அனைத்து வட்டாரங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் முன் களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற் பட்ட இணை நோய் (நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்) உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப் பூசி செலுத்தப்பட்டது. மேலும், இரண்டா வது தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட் கள் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர்  தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோவையில் நடைபெற்று வரும் இந்த முகாமில் காலை யில் இருந்தே முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்ப்பட்டோர் ஆர்வமுடன் வந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.