districts

img

தமுஎகச சார்பில் புத்தக வாசிப்பு இயக்க நிகழ்வு

கோவை, செப்.1- தமுஎகச கோவை மாவட்டக்குழு சார்பில், புத்தக வாசிப்பு இயக்க நிகழ்வு  ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக்குழு சார்பில், செப்டம்பர் மாத  இலக்கியச் சந்திப்பு - 252 ஆவது நிகழ்வு  வாசிப்பு இயக்கம் ஞாயிறன்று கோவை  ரயில் நிலையம் அருகே உள்ள தாமஸ்  கிளப்பில் நடைபெற்றது. இந்நிகழ் விற்கு, கவிஞர் ம.செங்குட்டுவன் தலைமை வகித்தார். கவிஞர் நா.உமா சங்கர் வரவேற்றார். முகமது யூசுப் எழு திய ‘கொத்தாளி’ நாவலை கவிஞர் காயத்ரி, பூமணியின் பிறகு நாவலை கவிஞர் சி.சூரியபிரகாஷ், நாகை ஆசைத்தம்பியின் சிறுகதைத் தொகுப்பை கவிஞர் எல்.ஜி.சிவக் குமார் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் “இந்தியாவில் சாதிகள்” என்ற நூலினை கவிஞர் க.தர்சன், அன்புத் ்தோழி ஜெயஸ்ரீயின் “பிறழ்வி” நூலினை  கவிஞர் ச.பிரியா, பிரியனின் “கடவுளின் வீடு ஜப்தி” செய்யப்படுகிறது என்ற கவிதைத் தொகுப்பை கவிஞர் இர. பாக்கியலட்சுமி ஆகியோர் வாசிப்பு இயக்க நிகழ்வில் உரையாற்றினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் மு.ஆனந்தன், ‘வாழை’  திரைப்படம் குறித்து சிறப்புரையாற்றி னார். மாவட்டத் தலைவர் தி.மணி, செய லாளர் அ.கரீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்க முருகேசன் உள்ளிட்ட  நிர்வாகிகள் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்ட னர். முடிவில், கவிஞர் வெ.அர.தாரணி  நன்றி கூறினார்.