districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கொதிகலன் வெடிப்பு: மின் உற்பத்தி பாதிப்பு

சேலம், டிச.12- மேட்டூர் அனல் மின் நிலையத்தில் முதலாவது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் செயல்பட்டு வரு கின்றன. இதன்மூலம் 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டு பிரிவுகளிலும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்நிலை யில், புதனன்று மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதலாவது பிரிவில் உள்ள கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி தடை பட்டுள்ளது. மற்ற அலகுகளில் தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் சங்க கோரிக்கை ஏற்பு

ஈரோடு, டிச.12-  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், மொடக் குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன் மறி யல் போராட்டம் நடத்த இருந்த நிலையில், பேச்சுவார்த்தையில் எழுத்துப்பூர்வமாக அதி காரிகள் உறுதி அளித்ததால் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட  இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். உதவித்தொகை கிடைக்காத மாற் றுத்திறனாளிகளுக்கு உடனே உதவித்தொகை வழங்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்க ளுக்கு 35 கிலோ அரசி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தினர் ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  வெள்ளியன்று (இன்று) மறியல் அறிவிக்கப் பட்டது. இந்நிலையில், மொடக்குறிச்சி வட் டாட்சியர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லர் மற்றும் காவல்துறையினர் போராட்டக் குழுவினரை அழைத்து வியாழனன்று அமைதி பேச்சுவார்த்தை  நடத்தினர். இதில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற அங்கீகாரம் செய்யப்பட்டவர் களுக்கு ஒதுக்கீடு வரப்பெற்றவுடன் உதவித் தொகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளி களுக்கான குடும்ப அட்டையாக வகைபாடு செய்திட மாவட்ட வழங்கல் அலுவலருக்கு முன்மொழிவு அனுப்பப்படும். அதன்பேரில்  உத்தரவு பெற்றவுடன் மாற்றம் செய்து அரிசி வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி யளிக்கப்பட்டது.  இப்பேச்சுவார்த்தையில் சங்கத்தின் (பொ) மாவட்டச் செயலாளர் ப.மாரிமுத்து, தாலுகாச் செயலாளர் கே.சொங்கப்பன், மஞ் சுளா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத னைத்தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக தாலுகாச் செயலாளர் சொங்கப்பன் தெரிவித்தார்.

சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி

சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி அவிநாசி, டிச.12- அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையத்தில் புதனன்று நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவன் உயிரி ழந்தார். திருப்பூர் அனுப்பர்பாளையம் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மகன் அஸ்வின்(18). பெரி யாயிபாளையம் பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் சந்துரு (20), கோவை தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன்.  இவர்கள் இருவரும் திருப்பூரில் இருந்து அவிநாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த  வாகனத்தை அஸ்வின் ஓட்டி வந்துள்ளார்.  அப்போது அவிநா சிலிங்கம்பாளையம் அருகே வாகனங்களை முந்திச் செல்ல   முயன்ற போது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலைத்  தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் கீழே  விழுந்ததில்,  அதே திசையில் வந்த அரசு பேருந்து சக்கரத்தில்  சிக்கி சந்துரு உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அஸ்வின் சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.  இந்த விபத்து குறித்து அவிநாசி  போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வரு கின்றனர்.

ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க கோரிக்கை

ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க கோரிக்கை சேலம், டிச.12- தம்மம்பட்டி அருகே சுவேத நதியில், நீர் பெருக்கெடுத்து  ஓடுகையில், கடப்பதற்கு சிரமமாக உள்ளதால் குறுக்கே பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ள னர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி, கோனேரிப் பட்டியில் சுவேத நதி செல்கிறது. பெல்ஜியம் காலனி, பாரதி புரம், கொண்டயம்பள்ளி, நாகியம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு  செல்ல நதியைத் தாண்டித்தான் செல்லவேண்டும். ஆற்றில்  நீர் பெருக்கெடுக்கும் போது இப்பகுதிகளில் வசிக்கும் சுமார்  5 ஆயிரம் பேர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இத னால் 10 கி.மீ. தொலைவு சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற் படுகிறது. இப்பகுதிகளிலிருந்து கூடமலை, தம்மம்பட்டி, கெங்கவல்லி பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் ஆற்றைக்கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். மழைக் காலங் களில் நியாயவிலைக் கடையில் பொருள்களை வாங்கவும்,  ஆற்றின் வடக்குப் பகுதியில் விளையும் விளைபொருள் களை விற்பனைக்கு கொண்டுசெல்லவும் முடியாமல் போய் விடுகிறது. எனவே, கோனேரிப்பட்டி சுவேத நதியின் குறுக்கே  பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

விபத்தில் மூன்று பேர் பலி

விபத்தில் மூன்று பேர் பலி கோவை, டிச.12– மதுக்கரை நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்  எதிரே வந்த ஈச்சர் லாரி மீது மோதிய விபத்தில் 2 மாத குழந்தை  உட்பட மூன்று பேர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற் படுத்தி உள்ளது.  கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம், திருவல்லா  பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் ஆபிரகாம் (60). ஷீபா (55).  இவர்களது மகன் தாமஸ் குரியாகோஸ், மருமகள் எலீனா  தாமஸ் (30), பேரன் ஆரோன் தாமஸ் (2மாதம்). தாமஸ்  குரியாகோஸ் துபாயில் பணியாற்றி வருகிறார். இந்நிலை யில் பெங்களூர் செல்வதற்காக ஜேக்கப் ஆபிரகாம், மனைவி  ஷீபா, மருமகள் எலீனா தாமஸ், பேரன் ஆரோன் ஆகி யோர் ஆல்டோ காரில் கேரளாவில் இருந்து கோவை வழி யாகச் சென்றனர். அப்போது காரை ஜேக்கப் ஆபிரகாம் ஓட்டி யுள்ளார். கொச்சின் – சேலம் தேசிய நெடுஞ்சாலை, மதுக் கரை போடிபாளையம் பிரிவு அருகே வந்த போது கட்டுப் பாட்டை இழந்த கார், எதிரே கரூரில் இருந்து கேரளா நோக்கிச்  சென்ற ஈச்சர் கொரியர் வாகனம் மீது நேருக்கு நேர் மோதி யது. இதில் காரை ஓட்டி வந்த ஜேகப் ஆபிரகாம், மற்றும்  ஷீபா, ஆரோன் தாமஸ் (2 மாதம்) ஆகிய மூன்று பேர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகா மடைந்து உயிருக்கு போராடிய எலீனா தாமஸை அவ்வழி யாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் கோவை  சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த மதுக்கரை காவல்  துறையினர் ஜேக்கப் ஆபிரகாம், ஷீபா மற்றும் ஆரோன் ஆகிய  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில்  சிக்கிய வாகனங்களை பொக்லைன் வாகனம் மூலம் அகற்றி னர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த மதுக்கரை  காவல் துறையினர் கொரியர் வாகனத்தை ஓட்டி வந்த கரூர்  மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் (39) என்பவரிடம் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடக வெளிச்சத்திற்காக அலையும் அண்ணாமலை

கோவை, டிச.12- தொடர் தோல்வியை சந்திக்கும்  அண்ணாமலை, ஊடக வெளிச்சத் திற்காக கண்டதையும் உளறிக் கொண்டிருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டமாக தெரி வித்தார். கோவை மாவட்டம், பந்தய சாலை பகுதியில் புதனன்று நடை பெற்ற சாலை பாதுகாப்பு தொடர் பான நிகழ்ச்சியில் அமைச்சர் செந் தில் பாலாஜி கலந்து கொண்டு பேசி னார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், காந்திபுரம் பேருந்து நிலையத்தை மேம்ப டுத்த ரூ. 30 கோடியும், சத்தி சாலையை விரிவுபடுத்த ரூ. 54 கோடி யும் வழங்கி உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து அண்ணாமலையின் விமர்சனங்கள் தொடர்பான கேள் விக்கு அவர் பதில் அளிக்கையில்,  சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை. பத்திரிகையாளர்கள் அவரை மறந்து இருப்பீர்கள். பத் திரிகையாளர்கள் தொலைக்காட்சி என திரும்பி பார்க்க வேண்டும் என் பதற்காக போகிற போக்கில் சிலர்  கருத்துக்களை பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். உங்க ளுக்கும் வேலை இருக்கிறது எங்க ளுக்கும் வேலை இருக்கிறது அரசு  நிர்வாகம் செம்மையாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அரசிய லில் முகவரி இல்லாதவர்கள் தொடர்ச்சியாக மக்களிடம் தோற்றுக்  கொண்டிருப்பவர்கள், உள்ளூரில் நின்றாலும் தோல்வி, வெளியூரில் நின்றாலும் தோல்வி என தொடர்  தோல்விகளை சந்திக்க கூடியவர்கள்  தங்கள் இருப்பைக் காட்ட மக்களி டம் வெளிச்சம் பெற பல்வேறு கருத்து களை கூறி வருகிறார்கள் என்றார். மேலும், அண்ணாமலை மீது வழக்கு  தொடர்வீர்களா? என வினவிய  போது, அவதூறு கருத்துகளைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை,  அரசியல் நாகரீகமாக இருக்க வேண் டும் அரசியலில் இருப்பவர்கள் பக்கு வப்பட்டவர்களாக இருக்க வேண் டும். சொல்லக்கூடிய கருத்துக்கள்  யாரும் புண்படாத அளவிற்கு யாரு டைய மனமும் வேதனைப்படாத அள விற்கு யாரையும் பழி சொல் சொல் லாத அளவிற்கு இருக்க வேண்டும்.  அது போன்ற பழக்கமும் இல்லா மல் பக்குவமும் படாதவர்கள் அரசிய லில் முதிர்ச்சி பெறாதவர்கள் அரசி யலுக்கு தகுதி இல்லாதவர்கள் இது  போன்ற வார்த்தைகளை தான் பயன் படுத்துவார்கள், என்றார்.

மின் வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை

ஈரோடு, டிச. 12- மின்வாரியத்தில் ஊழியர் பற் றாக்குறையின் காரணமாக ஈரோட் டில் மின் கட்டணம் செலுத்த வரும்  மின் நுகர்வோர்கள் திருப்பி அனுப் பப்படுவதால், அவதியடைந்து வரு கின்றனர். ஈரோடு மின் திட்டம் ஈரோடு  நகரியம், தெற்கு மற்றும் பெருந் துறை ஆகிய கோட்டங்களை உள் ளடக்கியது. அனைத்து பகுதியின ருக்கும் மின்விநியோகம் தமிழ் நாடு மின்வாரியத்தின் மூலம் அளிக் கப்படுகிறது. தற்காலிக பயன்பாட் டிற்காக யுபிஎஸ் உள்ளிட்ட சாத னங்கள் வைத்துக் கொள்ள முடி யும். சோலார் சிஸ்டம் நிறுவியிருந் தாலும் அதிலிருந்து உற்பத்தியா கும் மின்சாரத்தை வாரியத்திற்குக் கொடுத்து விட்டு அவர்கள் கொடுக்கும் மின்சாரத்தையே பயன்படுத்த முடியும்.  எனவே, மின்வாரியத்தில் மேற் குறிப்பிட்ட பதவிகளில் நுகர்வோர்  எண்ணிக்கைக்கேற்ப பணியாளர் கள், ஊழியர்கள் இருக்க வேண் டும். ஆனால் கள உதவியாளர்கள் 632 பேருக்கு வெறும் 24 பேர்  மட்டுமே இருக்கின்றனர். 608 இடங் கள் காலியாக இருக்கின்றன. கம்பி யாளர் பணியிடம் 417. அதில் 87 பேர்  மட்டுமே பணியில் உள்ளனர். 327 இடங்கள் காலியாக உள்ளது. கணக்கீட்டாளர்கள் 155 பேர் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 63 பேர் மட்டுமே இருக் கின்றனர். கணக்கீட்டு ஆய்வாளர் பணியிடம் 81 இல் 42 பேர் மட் டுமே உள்ளனர். வருவாய் மேற்பார் வையாளர் பணியிடமும் காலி யாக உள்ளது.  இவ்வளவு ஊழியர்கள் பற்றாக் குறையுடனே மின்வாரியம் மக்க ளுக்கு மின்விநியோகம் செய்து வருகிறது.  இதற்கிடையில், மின்வாரிய ஈரோடு மேற்பார்வை பொறியா ளர் அலுவலக வளாகத்தில் அமைந் துள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்த வரும் வாடிக்கையாளர் களை திருப்பி அனுப்பப்படுவ தாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரித்ததில் 8 கவுன்ட்டர் அமைத்து மின் கட்டணம் பெறப் பட்ட இடத்தில் ஒரு கவுன்ட்டர் மட் டுமே திறக்கப்பட்டுள்ளது. அதிலும்  ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவான  கட்டணமே பெறப்படுகிறது. அதற்கு மிகையானால் ஆன் லைனில் செலுத்துங்கள் என திருப்பி அனுப்பப்படுகின்றனர். இது மின் நுகர்வோர்களை பெரிதும் அவதிக்குள்ளாக்கப்படுகிறது.