உடுமலை, பிப்.20- அமராவதி அணையில் படகு சவாரி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள னர். உடுமலை அருகே உள்ள அமராவதி அணை யில் சுற்றுலா பயணிகளுக்காக, மகளிர் குழுக்கள் மூலம் படகு இயக்கப்பட்டு வருகிறது. 8 பேர் பயணிக்கும் ஒரே ஒரு மோட்டார் படகு இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக படகுகள் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது ஊர டங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலாத் தளங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து அணையில் சுற்றுலா பயணிக ளுக்கான படகு சவாரி தொடங்கப்பட்டு உள் ளது. ஆனால் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆர்வமாக வரும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.