districts

img

உதகை பூங்காவில் பூத்து குலுங்கும் துலிப்ஸ் மலர்கள்

உதகை, பிப்.20- உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சோதனை முயற்சியாக முதல் முறையாக  பயிரிடப்பட்டுள்ள துலிப்ஸ் செடிகளில் இளஞ் சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, மஞ்சள் உள் ளிட்ட பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூக்க துவங்கியுள்ளன. உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக  உதகை அரசு தாவரவியல் பூங்கா நூற்றாண்டு பழமை வாய்ந்த சுற்றுலா தல மாகும். இதனை கண்டு ரசிக்க தமிழகம் மட்டு மல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏரா ளமான சுற்றுலா பயணிகள் வருகை புரி கின்றனர். இவ்வாறு வருகை புரியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தோட்டக்கலைத் துறை சார்பில் பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, இத்தாலியன் பூங்கா ஆசிய கண் டத்தில் மிகப்பெரிய பரப்பளவில் பச்சை பசேல் என காணப்படும் புல்வெளி மைதானம் மற்றும் பல்வேறு உலக நாடுகளை தாயக மாக கொண்ட அரிய வகை மரங்களும் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ஆண்டுதோறும் மே மாதங்களில் கோடை சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சி நடத்தப் படுவது வழக்கம்.

இந்த மலர் கண்காட்சி யின் போது பூங்காவிற்கு வரும் சுற்றுலா பய ணிகளை கவர பல்வேறு உலக நாடுகளில் இருந்து மலர் நாற்றுகள் மற்றும் விதைகள் கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்படுவதும் கோடை சீசனின் போது நடவு செய்யப்பட்ட மலர் செடிகளில் மலர் நாற்றுகள் பூத்துக் குலுங்குவது வழக்கம். இதேபோல் இம்முறை ஆலந்து மற்றும் சீனா நாடுகளை தாயகமாகக் கொண்ட துலிப்ஸ் மலர்செடிகள் சோதனை முயற்சிக் காக முதல்முறையாக கொண்டுவரப்பட்டு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நர்சரிகளில்  வைத்து வளர்க்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த மலர் செடிகள் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்த நிலை யில், தற்போது இந்த மலர் செடிகளில் இளஞ் சிவப்பு, வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு உள் ளிட்ட பல்வேறு வண்ணங்களில் பூக்க துவங்கி யுள்ளன. இதேபோன்று, அமெரிக்கா, ஜப் பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள் ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் தருவித்த நாற்றுக்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு 150க்கும் மேற்பட்ட ரகங்கள் நடவு செய்யப் பட்டுள்ளன.  இந்த நிலையில்  பூங்காவில், புதர் வகையைச் சேர்ந்த பூக்கள் நடவு செய்யப்பட்டது. இந்நிலையில், தோட்டக்கலைத் துறை யினர் மேற்கொண்ட முயற்சி வெற்றி அடைந் துள்ளதால் இந்த ஆண்டு நடைபெறும் கோடை சீசனுக்கு வெளிநாடுகளில் இருந்து கூடுதல் மலர் நாற்றுகள் வரவழைத்து மலர் கண்காட்சியின் போது மலர் மடத்தில் சுற் றுலா பயணிகளின் பார்வைக்காக மலர்கள் அலங்கரித்து வைக்க பூங்கா நிர்வாகம் நடவ டிக்கை மேற்கொண்டுள்ளது.