districts

img

வாலிபர் சங்கம் சார்பில் இரத்ததான முகாம்

கோவை, பிப்.19- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ராசிபாளையம் கிளை சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் தாலுகா ராசிபாளையம் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கோவை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை சார்பில் ஞாயிறன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகா மில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, 35 யூனிட் குருதிக் கொடை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் செ. முத்துகண்ணன், ராசி பாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சி.கோமதி சந்தி ரன், வாலிபர் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் மணி பாரதி மற்றும் கிளை நிர்வாகிகளான மனோஜ் குமார், கௌ தம், பரணி, சந்தோஷ், கோகுல், தாலுகா நிர்வாகிகள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில், இரத்ததானம் வழங்கியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.