districts

img

கண்களை கட்டிக்கொண்டு மிதிவண்டி பயணம்

சேலம், ஜன.13– சேலத்தில் நடைபெற்ற, கண்களை கட்டிக்கொண்டு போதைக்கு எதிராக மிதிவண்டி விழிப்புணர்வு பயண உலக  சாதனை நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். சேலம் கைலாஷ் மானசரோவர் (சிபிஎஸ்இ) மேல்நிலைப் பள்ளியும், காவல் துறையினரும் இணைந்து, பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருள் தடுப்பு ஆரோக்கியமான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மாணவர்கள் கண்களை  கட்டிக்கொண்டு மிதிவண்டியில் பயணித்து உலக சாதனை படைத்தனர். இப்பயணத்தை துணை காவல் பொது ஆணை யர் என்.மதிவாணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியானது சேலம் ஏவிஎஸ் மற்றும் சக்தி கைலாஷ் கல்வி  குழுமங்களின் செயலாளர் ராஜவிநாயகம், இயக்குநர் கிரண் குமார், முதல்வர் அஸ்வினி பிரியா ஆகியோரின் தலைமை யில் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர்.