districts

img

கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண்க

கோவை, பிப்.14-  ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேசி, கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி கோவை, திருப்பூரில் விசைத்தறி கூடங்களில் கருப்புக்கொடி கட்டி விசைத்தறி யாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்க ளில் சோமனூர், காரணம்பேட்டை,  பல்லடம், மங்கலம், அவிநாசி, தெக் கலூர் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறித் தொழில் முதன்மைத் தொழிலாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிர மாநி லத்துக்கு அடுத்தபடியாக தமிழ் நாட்டில் இந்த பகுதிதான் அதிகள வில் விசைத்தறிகள் உள்ள பகுதி யாகும். ஏறத்தாழ ஒரு லட்சத்து 25  ஆயிரம் விசைத்தறிகள் 10 ஆயிரம் விசைத்தறிக் கூடங்களில் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் 1 லட் சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஓராண் டாக நடைபெற்று வரும் கூலி ஒப் பந்த பேச்சுவார்த்தைக்கு வர மறுக் கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும், மாநில அரசு மற்றும்  மாவட்ட நிர்வாகங்கள் தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வலி யுறுத்தியும், இப்பகுதியில் உள்ள  அனைத்து விசைத்தறி கூடங்களி லும் வெள்ளியன்று கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துவதென  கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரி மையாளர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பு முடிவு செய்தது.  இதன்தொடர்ச்சியாக, விசைத் தறி தொழிலாளர்கள் வெள்ளி யன்று கருப்புக்கொடி கட்டி போராட் டத்தை துவக்கியுள்ளனர். இந்த  போராட்டத்தில் ஈடுபட்ட விசைத் தறி தொழிலாளர்கள், தங்களது கோரிக்கைகளான ஒப்பந்த கூலி யில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும். ஒப்பந்த கூலியை குறைக் காமல் சட்ட பாதுகாப்புடன் அமல்ப டுத்த வேண்டும். மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகிய வற்றுக்கு ஏற்ப ஜவுளி உற்பத்தி யாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாகும். விசைத்தறி தொழிலாளர்கள் தங் களது கோரிக்கைகள் நிறைவேற வில்லை என்றால், நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று  தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்ட  போராட்டத்தில் ஈடுபடப்போவ தாகவும் எச்சரித்துள்ளனர்.  கடந்த ஒரு வருடமாக நீடித்து  வரும் மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக விசைத்தறி தொழிலாளர்கள் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத் தறி தொழிலாளர்களுக்கு இடையே நிலவும் கூலி பிரச்சினைக்கு தீர்வு  காண மாநில அரசும், மாவட்ட நிர் வாகமும் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைத் தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க பொருளாளர் பூபதி செய்தி யாளர்களிடம் பேசும்போது, இது வரை 7 முறை பேச்சுவார்த்தை நடந் தும் நிரந்தர தீர்வு எட்டப்பட வில்லை, இந்த கூட்டங்களில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங் கேற்கவில்லை அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண் டும். இல்லையென்றால் அடுத்த  கட்ட போராட்டத்திற்கு விசைத்தறி  சங்கங்கள் கூடி முடிவெடுக்கும். அதுவரையில், விசைத்தறிக்கூடங் களில் கருப்புக்கொடி போராட்டம்  நடைபெறும். இந்தப் போராட்டத் தில் சுமார் 7 ஆயிரம் விசைத்தறியா ளர்கள் பங்கேற்றுள்ளன, என்றார். விசைத்தறியாளர்களின்  இந்த போராட்டம் காரணமாக கருமத்தம் பட்டி மற்றும் சோமனூரில் உள்ள விசைத்தறி கூடங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.