districts

img

பாஜக அண்ணாமலை வருகை : ரேஷன் கடைகளில் மிரட்டி வசூல்

திருப்பூர் அக். 12 - திருப்பூருக்கு பாஜக தலைவர் அண்ணா மலை நடைபயணம் வர இருப்பதாகக் கூறி  இங்குள்ள நியாயவிலைக் கடைகளில் பாஜக வினர் மிரட்டி கூடுதல் தொகை தர வேண்டும்  என்று கட்டாய வசூலில் ஈடுபட்டுள்ளனர். பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 8 ஆம் தேதி திருப்பூரில் நடைபயணம் மேற் கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  ஆனால்  அதற்கு முன்பாக அண்ணாமலை வரம்பு மீறி உளறிக் கொட்டியதை காரண மாகச் சொல்லி அதிமுக பாஜகவுடன் கூட்ட ணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தது.   இதையடுத்து பாஜக டில்லி மேலிடம் அண் ணாமலையை அவசரமாக அழைத்து பேசி யுள்ளது. அங்கு என்ன நடந்தது என்று தெரிய வில்லை. அதற்குப் பிறகு அண்ணாமலைக்கு  உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி மருத்து வமனையில் தங்கியிருந்தார். மீண்டும் தனது நடைபயணத்தைத் தொடங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனிடையே ஏற்கெனவே திருப்பூ ரெங்கும் ஆடம்பரமாக பிளக்ஸ் தட்டிகளை கட்டி வைத்திருந்த பாஜகவினர், அவர் வருகை தள்ளிப் போன பிறகு வசூல் வேட் டையில் ஈடுபட்டனர்.  திருப்பூர் காங்கேயம் ரோடு, பெரிய பள்ளி வாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளுக்குச் சென்று, அண்ணாமலை வரு கையைச் சொல்லி பணம் வசூலித்துள்ள னர். கடைக்காரர்களும் வேறு வழியில்லாமல்  அவர்களால் முடிந்த தொகையை கொடுத் துள்ளனர். ஆனால் அதை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டு அவர்களாக ரூ.2000 ரசீது  போட்டு, அதைக்  கொடுத்து இந்த தொகை யைத் தர வேண்டும் என்று மிரட்டி கட்டாயப் படுத்தி உள்ளனர்.  இந்த தொகையைத் தராவிட்டால் ஏதே னும் குழப்பம் ஏற்படுத்தி ரகளை செய்வார் கள் என்று அஞ்சி கடைக்காரர்களும் வேறு  வழியில்லாமல் 2000 ரூபாயைக் கொடுத்து அனுப்பியுள்ளனர்.  இதை நியாயவிலைக் கடைக்குச் சென்ற  பெண்கள் கவனித்ததுடன், மோடி ஆட்சி  விலையை உயர்த்தி கொடுமைப்படுத்துகி றது. அவர்கள் கட்சிக்காரர்கள் இப்படி அடா வடியாக மிரட்டி வசூல் செய்கிறார்கள். தேர்த லில் இவர்களை தோற்கடிக்க வேண்டும் என்று பேசி கொண்டனர்.